headlines

img

நீதி காலாவதியாகிறதா?

இந்தியாவையே அதிரச் செய்த பாபர் மசூதி இடிப்பு மற்றும் 2002 குஜராத் கலவரம் தொடர்பு டைய நிலுவை வழக்குகளை உச்சநீதிமன்றம் நீதியே இன்றி அநீதியாய் முடித்து வைத்திருக் கிறது. எளிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதித் துறைதான் என்ற நம்பிக்கை மீண்டும் தவிடு பொடியாகியிருக்கிறது. 

1992, டிசம்பர் 6 அன்று ராமஜென்ம பூமியில் அடையாள கரசேவை நடத்தப் போகிறோம் என உச்சநீதிமன்றத்திலும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலிலும் வாக்குறுதி கொடுத்தது பாஜக தலைமை. ஆனால் அதற்கு மாறாக பாபர் மசூதியை இடித்துத் தள்ளி தற்காலிக ராமர் கோவிலையும் கட்டியது. அதன் மூலம் அப்பட்ட மாக உச்சநீதிமன்றத்தை அவமதித்தது. அதன் அடிப்படையிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் முதன்மை குற்றவாளிகளாக எல்.கே.அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்த  32 பேர் பட்டியலிடப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்காமல் நிலுவையிலேயே வைக்கப்பட்டன.  திடீரென தற்போது  உச்சநீதிமன்றம் ஏற்கனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு  வழங்கி விட்டது. எனவே மீண்டும் இந்த வழக்கு களை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இது தொடர்பான அனைத்து வழக்குக ளையும் முடித்து வைக்கிறோம் என குற்றவாளி களை காப்பாற்றியிருக்கிறது. இந்த தீர்ப்பு இனி  நீதிமன்றத்தில் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து  விட்டு அதற்கு நேர்மாறாக நடக்க முன்னுதாரண மாக அமைந்துவிடாதா?  இந்த வழக்கை முன்ன தாகவே விசாரித்திருக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தற்போது கூறுகிறது. விசாரிக்காதது யாருடைய குற்றம்? 

இந்த தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தையே அவமதிப்பதாக அமைந்துவிடாதா?  ஒரு குற்றச் செயலில் பல்வேறு முகாந்திரங்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் யப்படுகிறது. அனைத்து முகாந்திரங்களையும் விசாரிப்பதன் மூலமே  முழுமையாக உண்மையை உறுதி செய்து  நீதியை வழங்க  முடியும்.  ஆனால் தற்போதைய உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அதனை தலைகீழாக  மாற்றியிருக்கிறது. சட்டத்தை வளைக் கும் உரிமை நீதிபதிகளுக்குக் கிடையாது. 

2002 குஜராத் கலவரம் தொடர்பான நிலுவை யில் உள்ள 11 வழக்குகள் மீதான விசாரணை பயனற்றதாகி விட்டதால் அந்தமனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பெரும் பகுதி வழக்குகள் விசாரணையே முறையாக நடை பெறவில்லை என்பதை ஆதாரமாக வைத்துத் தொடரப்பட்டவைதான். உரிய முகாந்திரம் இருந்த தால்தானே  விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப் பட்டது. அப்படியிருந்தும்  ஏன் 20 ஆண்டுகளாக விசாரிக்கப்படவில்லை? உச்சநீதிமன்றம் விசாரிக் காமலேயே  எப்படி விசாரணை பயனற்றது என்ற  முடிவுக்கு வரமுடியும்? இது போன்ற போக்கு,  நீதியே காலாவதியாகிறதோ? என்ற எண்ணத்தைத் தான் மக்களிடம் உருவாக்கும்.