headlines

img

யார் தீவிரவாதிகள்?

சென்னையில் தி கேரளா ஸ்டோரி திரைப் படத்தைப் பார்க்க வந்த பாஜக  மூத்த தலைவர் எச்.ராஜா வழக்கம்போல் ஊடகத்தினர் மீது பாய்ந்துள் ளார். இஸ்லாமியர்கள் குறித்து இதர சமூ கத்தினர் மத்தியில் வெறுப்பை உமிழும்  தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அருமையான திரைப் படம் என அவர் கூறினார். 

அப்போது  குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், “குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்” என கேள்வி யெழுப்பினார். அதற்குப் பதில் அளிக்காமல் நிதானம் இழந்து இங்கு என்ன விஷயத்துக்காக வந்திருக்கிறோம். அதை பேசுங்கள்.. என்று கூறிக்கொண்டே வெட்கமே இல்லாமல் வேறு எதையோ பற்றி பேசிட்டு இருக்கீங்க.. நீங்க ஐஎஸ்ஐ ஏஜெண்டா” என ராஜா கத்தினார். இப்படித்தான் பல பாஜக தலைவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் கேள்வி கேட்ட வர் மீது  தீவிரவாத முத்திரை குத்துகிறார்கள்.

கேரளா ஸ்டோரி  திரைப்படத்தைத் தடுக்க முதல்வரும் காவல்துறைத் தலைவரும் முயல்வ தாகக் கூறி அவர்கள் மீதும் ராஜா பாய்ந்தார். பிபிசி ஆவணப்படம் கூட உண்மையைத் தான் சொன்னதே  என்று நினைவூட்டியபோது,  “நீங்கள் எல்லாம் யார்- எங்கிருந்து வருகிறீர்கள், அறிவா லயத்தில் இருந்தா என்று கேட்டுக்கொண்டே இந்த திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் அனை வரும் தீவிரவாதிகள்” என்று சாபமிட்டார்.

உலகில் நடக்காத எந்த விஷயத்தையும் இந்த திரைப்படத்தில் சொல்லவில்லை என அவர் கூறியபோது, “2002 குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படமும் உண்மையைத்தானே சொன்னது” என்று ஊடகத்தினர்  கேட்டபோது கோபமாகத் திட்டிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். யார் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை ராஜாவுக்கு  நினை வூட்டவேண்டியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைத்திருந்தால் புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தடுத்திருக்கமுடியும் என ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்லியிருக்கிறார்.  அஜ்மீர் தர்கா அருகே 2007 ஆம் ஆண்டு  நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த  வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பாவேஷ் படேல் ராஜஸ்தானில் சொந்த ஊருக்குத் திரும்பியபோது, விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

 2006ஆம்  ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில்  37 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூருக்கு பாஜக, எம்பி பதவி வழங்கி அழகுபார்த்தது. இப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த ராஜா தான் மற்ற வர்களைப் பார்த்து தீவிரவாதி என்று சொல்கிறார்.