பிரதமர் நரேந்திர மோடியின் வறட்டுப் பிடி வாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியுள்ளன. மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன் றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச கோரிக்கை யைக் கூட ஏற்க மறுக்கும் மோடி நாடாளுமன்றத் திற்கு வெளியே தொடர்ந்து பேசி வருகிறார்.
இதனிடையே அவையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவது குறித்து அதிர்ச்சி தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர் கள் அவை மாண்பைக் காக்கும் வரையில் அவைக்குள் வரப் போவதில்லை என்று கூறி யுள்ளதாக நாடாளுமன்ற செயலக அதிகாரி கள் கூறியுள்ளனர்.
ஓர் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பிறகு அவையின் எந்த வொரு சட்ட முன்வரைவையும் நிறைவேற்றக் கூடாது என்பது மரபு. ஆனால் ஆளுங்கட்சி யான பாஜக அவையில் நிலவும் அமளிகளுக்கு இடையே தாம் விரும்பும் சட்டமுன்வரைவு களை நிறைவேற்றி வருகிறது. இது அவையின் கண்ணியத்தை, மரபை உடைக்கும் செயல் அல்லவா? இதை மக்களவை சபாநாயகர் கண்டிக்க முன்வராதது ஏன்?
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லா தீர்மானத்தை வேறு வழியில்லாத நிலை யில் ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்த போது ஆளுங்கட்சியான பாஜகவினர் எதிர்த்து கூச்சலிட்டது அவையின் மாண்பைக் குலைக்கும் செயல் அல்லவா? இதை சபாநாயகர் கண்டிக்கா தது ஏன்?
அவையின் கண்ணியத்தை காப்பதற்கு சபா நாயகருக்கும் பொறுப்பு உண்டு அல்லவா? பிரதமர் மணிப்பூர் நிலைமை குறித்து அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கூற மறுப்பது ஏன்? மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆட்சியின்மீது கொண்டு வரப் பட்டுள்ள நிலையில் சட்ட முன்வரைவுகளை தாக்கல் செய்து நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட மறுப்பது ஏன்?
தில்லி மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா, சுரங்க குத்தகைகளை ஒன்றிய அரசே விடுவதற்கு அதிகாரம் அளிக் கும் மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா என ஒன்றிய அரசு விரும்புகிற மசோதாக்க ளை அறிமுகப்படுத்தவும், சிலவற்றை நிறை வேற்றிக் கொள்ளவும் அனுமதிப்பது முறையா? முக்கியமான இந்த மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்தப்படாதது அவையின் கண்ணி யத்துக்கு ஏற்றதுதானா? உண்மையில் நாடாளு மன்ற கூட்டத் தொடரில் கடந்த முறையும் இந்த முறையும் முடக்குவது ஆளும் கட்சிதான். சபா நாயகர் அவைக்கு வர மறுப்பது பிரச்சனைக்கு தீர்வாகாது? ஆளும் கட்சியை கண்டிக்க அவர் முன்வரவேண்டும்.