புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற பதிப்பகம் பிரதமர் மோடியை புகழ்ந்துரைக்கும் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரு கிறது. இந்த வரிசையில் பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிடும் புத்தகம் ஒன்றை அது வெளியிட்டுள்ளது. அந்த நூலுக்கு இசையமைப் பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இதுகுறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சமூகநீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் முத்த லாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அம்பேத்கர் இப்போது இருந்தி ருந்தால் பெருமிதப்பட்டிருப்பார் என்றும் இளைய ராஜா தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள் ளார். மேலும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரும் கனவு கண்டவர்கள் என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பொருத்தமற்ற ஒப்பீட்டிற்கு கடும் எதிர்வினை எழுந்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் சாதிய கொடுமைகள் இல்லாத சமூக நீதி நிலைநிறுத்தப்பட்ட தேசத்தை கனவு கண்ட வர். ஆனால் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப் பால் உருவாக்கப்பட்டவர். ஆர்எஸ்எஸ் அமைப் பின் கனவுதான் மோடியின் கனவு. மனுநீதி அடிப்படையில் சனாதன நாடாக இந்தியாவை மாற்றுவதும் ஒட்டு மொத்தமாக நாட்டை கார்ப்ப ரேட்டுகளுக்கு கைமாற்றி விடுவதும்தான் மோடி யின் கனவு. இருவரது கனவும் வெவ்வேறானவை.
அம்பேத்கர் கூறிய அனைத்துக்கும் எதிர்த் திசையில் நடப்பவர்தான் மோடி. அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியல் நிர்ணய சபையின் வரைவுக்குழு உருவாக்கிய இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக, கூட் டாட்சிக் கோட்பாட்டை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தை முற்றாக மாற்ற வேண்டும் என்பதே மோடி மற்றும் அவரை வழிநடத்துகிற ஆர்எஸ் எஸ்-சின் திட்டம்.
பொதுவாக அரசியல் குறித்து வெளிப்படை யாக பேசாத இளையராஜா இப்போது திடீரென்று மோடிக்கு ஆதரவான பொய்யான புனைவுகளை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது அவரது இந்தக் கருத்துக்கான விமர்சனமே அன்றி அவர் இசைத்துறைக்கு ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பு குறித்தானது அல்ல.
இந்தக் கருத்தை வெளியிட அவருக்கு உரிமை உண்டு என்றால் அதை விமர்சிக்கும் உரி மையும் அனைவருக்கும் உண்டு. ஆனால் எப்படி யோ இளையராஜாவை தங்களுக்கு ஆதரவாக கருத்துச் சொல்ல வைத்த பாஜக பரிவாரம், அவருடைய கருத்துக்கு எதிரான விமர்சனங் களை மடைமாற்றி அவரை இழிவுபடுத்துவதாக கூறுவது அப்பட்டமான திசை திருப்பலாகும். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை அவமதிப்பதாக பொங்கியுள்ளார். கடும் எதிர்ப்பு க்கு இடையிலும் கூட தன்னுடைய கருத்தை திரும் பப் பெறப்போவதில்லை என்று இளையராஜா கூறி யுள்ளார். அம்பேத்கர் மற்றும் மோடி குறித்த குறைந்த பட்ச புரிதல் கூட அவருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரு விசயத்தில் கருத்துக் கூறும் உரிமை அவருக்கு உண்டு என்றால் அந்தக் கருத்தை மறுக்கும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு.