headlines

img

ஊடகங்களின் குரலை மௌனமாக்கும் பாஜக

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரபல பத்தி ரிகையாளர்  நிகில் வாக்லே  பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும்  பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். அத்வா னிக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டி த்து  புனேயில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுவதற் காக மனித உரிமை வழக்கறிஞர் அசீம் சரோட், சமூக ஆர்வலர் விஸ்வம்பர்  சௌத்ரி  ஆகியோரு டன் சென்று கொண்டிருந்தபோது நிகில் வாக்லே தாக்கப்பட்டார். அவரது கார்கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.  காவல்துறை பாதுகாப்பு டன் சென்ற போதும் இவர்கள்தாக்கப்பட்டனர்.

பாஜகவில் மோடியால் ஓரங்கட்டப்பட்ட எல்.கே. அத்வானிக்கு ஆட்சியை விட்டு போகும் தரு வாயில் உள்நோக்கத்துடன் மோடி, பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளார். இதை எதிர்த்து கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 9(1)(ஏ)  அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை  உத்தர வாதப்படுத்தியுள்ளது. இதில் அரசியல் விமர்ச னம் மற்றும் கருத்துக்களும் அடங்கும். பத்தி ரிகை சுதந்திரத்தின் அடிப்படையில்தான்  ஆரோக்கியமான ஜனநாயகம் கட்டமைக்கப்படு கிறது. 

வாக்லே மீது தாக்குதல் நடைபெறுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே ஆறுமுறை அவர் தாக்கப்பட்டுள்ளார். இது ஏழாவது தாக்கு தலாகும். ஆனால், பாஜக உள்ளூர்  தலைவர் அளித்த புகாரின் பேரில் வாக்லே மீதே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 

2022 ஆம் ஆண்டில் ஏழு பெண் பத்திரிகை யாளர்கள் உட்பட மொத்தம்  194 பத்திரிகையாளர் கள் இந்தியா முழுவதும் குறிவைக்கப்பட்டனர். பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. புல னாய்வு செய்து எதையாவது பத்திரிகையாளர் கள் கண்டுபிடித்து உண்மையை வெளியே சொல்லிவிட்டால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தில்லியில்  பணி புரியும் கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகை யாளர் சித்திக் கப்பான்  உள்பட  சாதாரண பத்தி ரிகையாளர்கள் இந்த வழக்கை நடத்துவதற்கே தங்களது காலத்தைக் கழிக்கவேண்டிய நிலை யில் உள்ளனர். இதனால்தான்  உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 150ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

பத்திரிகையாளர்களுக்கு எதிராக   எஃப்.ஐ.ஆர்.  பதிவு செய்வதன் மூலம்  அவர்களது  செயல்பாடுகளை மௌனமாக்க  ஆட்சியாளர் கள் முயற்சிக்கிறார்கள். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.