headlines

img

ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரம்

மதச்சார்பற்ற கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பாட்னா, பெங்களூரு கூட்டத்தை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற 3ஆவது கூட்டமும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. முதல் இரண்டு கூட்டங்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடி இந்த கூட்டணியை கடுமையாக தாக்கி பேசிவருவதில் இருந்து இந்த கூட்டணி குறித்து அவருக்குள் உள்ள அச்சம் வெளிப்பட்டு விட்டது. அதுமட்டுமல்ல, இந்தியா என்ற நாட்டின் அன்புக்குரிய பெயரை பிரதமரும் மத்திய அமைச்சர்களும் பயங்கரவாத அமைப்பு டன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அடிமையின் சின்னம் என்றும் வசை பாடுகிறார்கள்.

இந்தியா என்ற பெயரில் உள்ள சட்டங்களில் அந்த வார்த்தையை மாற்றுகிறார்கள். இந்தியா என்ற பெயரை கேட்டாலே எரிச்சல் அடைகிறார் கள்.  இந்த கூட்டணியில் சேர்ந்துள்ள மாநில கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி திடீர் திடீரென சோதனைகளை நடத்துகிறார்கள். 

கடந்த 9 ஆண்டுகளாக பாஜகவும் ஆர்எஸ் எஸ்ஸும் பரப்பிய வகுப்புவாத விஷம் இப்போது அப்பாவி ரயில் பயணிகள் பள்ளிக் குழந்தைகளு க்கு எதிராகத் திரும்பியுள்ளது. மோடியின் பார தம் கொடூரமான பலாத்காரத்தில் ஈடுபட்ட வர்களை விடுதலை செய்து கவுரவிக்கிறது.  பழங்குடியினர் வன உரிமையை பறிக்கிறது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீது சிறுநீர் கழிக்க வைக்கிறது.  

மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு மறுக் கப்படுகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்க ளுக்கு ஊரக வேலை உறுதித்திட்ட நிலுவைத் தொகையை வழங்காமல் பழிவாங்குகிறது. நிதி ஆயோக் பரிந்துரையின்படி சிறப்பு மானியங்கள் விடுவிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை, சிபிஐ தலைமை இயக்குநர்கள், தேர்தல் ஆணையர்கள்  பாஜக நிர்வாகிகள் போல் நிய மிக்கப்படுகின்றனர். 

இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றுமையுடன் செயல் படுவதால் பாஜகவினருக்கு பதற்றம் அதிகரித் துள்ளது. அதனால் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி  கேட்பவர்கள் இடைநீக்கம் செய்யப்படு கிறார்கள். 

மக்கள் நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங் களை கூட்டாக ஏற்பாடு செய்ய இந்தியா கூட்ட ணியின் மும்பை கூட்டம் முடிவு செய்துள்ளது. இந்த கட்சிகள் ஒத்த கருத்துடன் கூட்டாக செயல்பட்டால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. பாஜகவின் எதேச்சதி காரமான  தவறான ஆட்சியால் பாதிக்கப் பட்டுள்ள மக்கள் தங்கள் துயரங்களிலிருந்து விடுபட இந்தியா கூட்டணியின் மீது மிகுந்த நம்பிக்கையுடன்  காத்திருக்கிறார்கள். அவர்க ளின் எதிர்பார்ப்பை இந்தியா கூட்டணி நிச்சயம் நிறைவேற்றும்.