headlines

img

பெயர் மாற்றம் மட்டும் அல்ல

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கு மான பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள ‘இந்தியா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பாரத்’ என்று மாற்றப்பட வேண்டும் என பள்ளிப் பாடத்திட்டத்தை திருத்துவதற்காக என்.சி.இ. ஆர்.டி நியமித்துள்ள குழு பரிந்துரை செய்துள் ளது. இது தேவையற்ற வேலை என்பதோடு மாணவர்களிடையே வீண் குழப்பத்தை ஏற் படுத்தக்கூடிய ஒன்றாகும்.

வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சனை களில் நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், மக்க ளது கவனத்தை திசை திருப்பும் வகையில் பல்வேறு வேலைகளில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டு மக்களிடையே பதற்றத் தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகை யில் பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியா கவே இந்த பெயர் மாற்ற வேலையும் அமைந்துள் ளது எனலாம்.

இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் ஒரு இடத்தில் ‘பாரத்’ என்ற பெயர் இடம் பெற் றுள்ளது என்பது உண்மைதான். எனினும் அரசி யல் சட்டம் துவங்கி அனைத்து ஆவணங்களி லும் இந்தியா என்கிற பெயரே நிலை பெற்றுள் ளது. அரசியல் நிர்ணய சபையில் நாட்டினு டைய பெயர் எவ்வாறு இடம் பெற வேண்டும் என நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்று முடிவில் இந்தியா என இறுதி செய்யப் பட்டுள்ளது.

ஆனால் ஜி-20 மாநாட்டு தலைவர்களுக் கான விருந்து அழைப்பிதழில் முதன்முறையாக குடியரசு தலைவரின் பெயருக்கு முன்பாக பாரத் என்கிற பெயர் இடம் பெற்றது. அதைத் தொ டர்ந்து மாநாட்டில் பிரதமரின் இருக்கைக்கு முன்பு பாரத் என்கிற பெயர் எழுதப்பட்டிருந் தது. நாட்டின் பெயரையும் மாற்றப் போவதாக செய்தி வெளியாகி பின்னர் அது மறுக்கப்பட்டது. 

ஆனால் அறிவிக்காமலேயே நாட்டின்பெயரை  பாரத் என்று மட்டும் அழைப்பதற்கான பணியில் ஒன்றிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபட்டுள் ளது. அதற்கு ஒத்திசைவாகவே என்.சி.இ.ஆர்.டி குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. 

பாரத் என்று பெயரை மட்டுமல்ல, மதச்சார் பற்ற நாடு என்ற உள்ளடக்கத்தையே மாற்ற முயற்சி நடக்கிறது. ஏற்கெனவே பாடத்திட்டத் தில் பல்வேறு குழப்பங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. வரலாற்றை புராண அடிப்படையில் திருத்தி எழுதுகிறது. அறிவிய லுக்கு பதிலாக புனை கதைகளை புகுத்துகிறது.

ஆர்எஸ்எஸ் இந்த நாட்டை ‘ஆரிய வர்ஷம்’  என்று அழைக்க வேண்டும் என்று கூறுகிறது. இதற்கான பரிந்துரை கூட அடுத்து வரக் கூடும். மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி தன்மை கொண்ட நவீன இந்தியாவை சீர்குலைக்க மேற் கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.