பத்தாண்டு காலம் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இப்போதுதான் ஒரு மாநிலத்து க்கு, அல்ல அல்ல... அவரால் 4 ஆண்டுகளுக்கு முன் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்ட மாநி லத்துக்குச் சென்றிருக்கிறார். அது ஜம்மு - காஷ்மீர் தான். அதன் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசும் போது, உங்க ளின் இதயங்களை வெல்லவே காஷ்மீர் வந்துள் ளேன் என்றும் நாட்டின் கிரீடமாக ஜம்மு -காஷ்மீர் திகழ்கிறது என்றும் கூறியுள்ளார்.
அந்த கிரீடத்தை அடித்து நொறுக்கியதே நீங்கள் தானே! நாட்டிலேயே முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த மாநிலமும் அதுதானே! அது உங்களது ஆர்எஸ்எஸ் பரிவா ரத்தின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் தான், ஜனநாயக நடை முறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, சட்டமன்றத்தின் கருத்தைக் கேட்கா மல் உங்களது ஏஜண்டான ஆளுநரின் ஒப்பு தலுடன் நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி சிறப்பு அந்தஸ்து தரும் 370ஆவது பிரிவை நீக்கி, அதன் மாநில அந்தஸ்தையும் அழித்தீர்கள். யூனியன் பிரதேசம் என்றாக்கி னீர்கள். லடாக் பகுதியையும் தனியாகப் பிரித்தீர்கள்.
இதை எதிர்த்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் வீட்டுச்சிறை, நடமாடத் தடை, இணைய தள முடக்கம், செய்தி நிறு வனங்கள் முடக்கம் என அனைத்தையும் செய்து ஜனநாயகத்தை முடமாக்கினீர்கள். அப்போது விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றீர்கள். ஆனால் இதுவரை சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவே இல்லை.
இதற்கிடையே 2020-ல் நடந்த மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் ஜம்மு -காஷ்மீ ரின் உரிமையைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட ஏழு கட்சிகளின் குப்கர் பிரகடன பாதுகாப்பு கூட்டணி, பெரும் வெற்றி பெற்றது. அதனா லேயே சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு எந்த வித நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டீர் கள். வரும் மக்களவை தேர்தலின்போதாவது சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதற் கான அறிகுறியும் இல்லை.
இப்போது காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் உத்தரவாதம் என்று பேசுகிறீர்கள். ஆனால் உங்களது வாக்குறுதிகளுக்கு நீங்களும் விசுவாச மாக இருப்பதில்லை. உங்கள் அரசும் விசுவாச மாக இருப்பதில்லை. இந்நிலையில் உங்கள் வாக் குறுதிகளுக்கு யார் உத்தரவாதம் தருவது?
நீங்கள் எவ்வளவு கியாரண்டி கொடுத்தா லும் உங்களால் உள்ளம் நொந்து கிடக்கும் காஷ்மீர் மக்களின் இதயங்களை வெல்ல முடி யாது. ஆனால் உங்களது கட்சி யின்தோல்விக்கு காஷ்மீர் மக்கள் உத்தரவாதம் தருவது உறுதி. அப்போது தான் காஷ்மீரின் தனித்தன்மையும் ஜன நாயகமும் மக்களின் நல்வாழ்வும் பாதுகாக்கப் படும். அது உத்தரவாதம்.