headlines

img

திட்டமிட்டு சிதைக்கப்படும் கிராமப்புற இந்தியா

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியில் ரூ.3,360 கோடி பாக்கி இருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் கிராமப்புற வேலை வாய்ப்புறுதித் திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய கூலிப் பாக்கி அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் கிராமப்புற வேலை வாய்ப்புறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கூலிப் பாக்கி என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் ஆபத்து உள்ளது. 

கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் நூறு நாள் வேலைத்திட்டம்தான் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளி மக்களை ஓரளவு காப்பாற்றி வந்தது. பொது முடக்கம் காரணமாக இந்தத் திட்டத்தில் அதிகளவில் தொழி லாளர்கள் சேர்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் கூலிப்பாக்கி நீடித்துக் கொண்டேயிருப்பதால் பட்ஜெட் ஒதுக்கீடு என்பது பழைய பாக்கியை செலுத்தவே பெரும்பாலும் செலவிடப்படுகிறது.

இதனால் ஒவ்வோராண்டும் நிதியை அதிகரிப்ப தற்கு பதிலாக மோடி அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 25.51 சதவீதம் குறைவாகும். 

கிராமப்புற வேலை வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் புலப் பெயர்வு ஏற்பட்டு நகரங்களில் அத்தக்கூலிகளாக  குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இந்த பட்ஜெட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு 98 ஆயிரம் கோடி அளவுக்காவது ஒதுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடந்த பட்ஜெட்டை விட குறைக்கப் பட்டுள்ளது.

கொரோனா முதல் அலை ஊரடங்கின்போது இந்தத் திட்டம் 11 ஆயிரம் கோடி மக்களுக்கு வாழ்வா தாரமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் திட்டத்தைச் சீர்குலைக்க மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இடதுசாரிக் கட்சிகளின் தொடர் வற்புறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் கிராமப்புற இந்தியா நொறுங்கிவிடாமல் ஓரளவு காத்து நிற்கிறது. 

ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் மேலும் வரிச்சலுகையையும், கடன் தள்ளுபடி யையும் அளித்து வரும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கோடானுகோடி கிராமப்புற விவசாயத் தொழிலாளிகளை திட்டமிட்டே வஞ்சிக்கிறது. வேலை நாட்களை அதிகரித்து, கூலியை உயர்த்தி, நகர்ப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டுள்ள நிலையில், உள்ளதையும் பறிக்கிறது ஒன்றிய அரசு.