கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வ ரப்பா கமிஷன் கேட்டு செய்த சித்ரவதையால் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்திருக்கி றார். இந்த சம்பவம் கார்நாடகாவில் பாஜக தலை மையில் ஊழல் சாம்ராஜ்ஜியம் நடப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
கடந்த ஓராண்டிற்கு முன்பே கர்நாடகத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சங்கத்தினர் பிரதமர் மோடி க்கு ஓர் கடிதம் எழுதியிருந்தனர். அதில் அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு ஆளும் கட்சி அமைச்சர் கள் 40 சதவிகிதம் கமிஷன் கேட்கின்றனர். ஊழலை ஒழிப்பதாகக் கூறும் தாங்கள் தலை யிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரி வித்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடியோ எந்த தலையீடும் செய்ய வில்லை. மாறாகத் தனது மவுனத்தின் மூலம் ஊழலுக்கு அங்கீகாரம் அளித் திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியே, அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவிகிதம் கமிஷன் கேட்டுக் கொடுத்த டார்ச்ச ரால் ஹிந்து வாஹினி அமைப்பின் தேசிய செய லாளரும், ஒப்பந்தக்காரருமான சந்தோஷ் பட்டீல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சங்பரிவார் அமைப்பின் தேசிய செயலாளருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன வாக இருக்கும்? இந்த நிலையிலும், கூட அமைச்சர் ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் தக்க வைத்திருப்பது தான் பாஜகவின் ஊழல் ஒழிப்பு லட்சணம்.
ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் ரூ. 4325.49 கோடி முறைகேடாக வழங்கியிருப்பது நாடாளுமன்றத் திலே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 14 லட்சம் பேர் வருமான வரி செலுத்துபவர்கள். இந்த முறை கேட்டில் முதல் 4 இடங்களை பாஜக ஆளும் மாநி லங்களே பிடித்திருக்கின்றன. அசாம் ரூ.768.3 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ. 191, கர்நாடகா ரூ. 123 கோடி, உத்தரப் பிரதேசம் ரூ.98 கோடி. பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழே இப்படி ஊழல் மலிந்துள்ள போது, அவர் எப்படி கர்நாடக மாநி லத்தில் நடைபெறும் ஊழலைத் தடுக்க முடியும்?
பாஜக எப்போதும் வித்தியாசமான கட்சி தான். அமித்ஷாவின் கூட்டுறவு ஊழல் துவங்கி, மோடியின் ரபேல்பேர ஊழல் வரை ஒவ்வொன் றும் ஒவ்வொரு ரகம்தான். அதிலும் காவி - கார்ப்ப ரேட் கூட்டுக் கொள்ளை தனி ரகம். இந்த ஊழல் கூட்டுக் கொள்ளைக்கு உடன்படாதவர்கள் அதி காரத்தில் இருக்கவே முடியாது என்பதுதான் ஒன்றிய மோடி ஆட்சியின் இன்றைய நிலை. இதை ஆர்எஸ்எஸ்- க்கு வேண்டிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்கே கூறுகிறார்.
கோவாவில் கொரோனா பேரிடர் காலத்தை கூட பாஜக விட்டுவைக்கவில்லை. அப்போது செயல்படுத்திய பல்வேறு திட்டங்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் செயல்படுத்தினர். அதே போல் ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்ட நேரத்தில் சில முக்கிய கோப்புக்களை அழிக்கச் சொன்னார்கள் . நான் மறுத்தேன், அப்போது பாஜக துணையோடு ரூ. 300 கோடி தருவ தாக என்னிடம் பேரம் பேசினர். இதற்கு உடன்பட மறுத்ததால் நான் அங்கிருந்து மாற்றப்பட்டேன் என்கிறார். இதை விட இவர்களின் ஊழலுக்கு வேறு சாட்சி வேண்டுமோ?