headlines

img

திருத்தப்பட வேண்டிய கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  ``ஹிஜாப் அணிந்து செல்வதற்கு கர்நாடக மாநில கல்வித் துறை விதித்த தடை செல்லும் என, அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியில் இஸ்லாமியர்களின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக  ஹிஜாப் அமைந்துள்ளது.  

இஸ்லாம் குறித்து மேற்கத்திய நாடுகள் மக்கள் மத்தியில்  கட்டவிழ்த்துவிட்டுள்ள பீதியும் இஸ்லா மிய வெறுப்பும் `ஹிஜாப் தடைக்கு வித்திட்டுள் ளன. சில மேலை நாடுகள் ஹிஜாபை தடை செய்ய முயற்சிக்கின்றன.  இந்தியாவிலும் இலங் கையிலும் இது நடக்கிறது. இதன் விளைவுகள்  தீவிர இன, மதப் பிளவுகளுக்கே வழிவகுக்கும். ஹிஜாப் அணிவது மத அடிப்படையில் கட்டா யமா?  இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளதே  தவிர வேறு யாருக்கும் இல்லை. 

முஸ்லிம்கள் மத்தியில் இதுபற்றிய கருத்து வேறுபாடு உண்டு. அதை அவர்களே பேசிக் தீர்க்க வேண்டும். எந்தப் பண்பாட்டுச் சீர்திருத்த மும் உள்ளிருந்தே வரவேண்டும். வெளியாரால் நிர்ப்பந்திக்க முடியாது. பண்பாட்டுப் பன்மைத்து வம் மதிக்கப்பட வேண்டும். பண்பாட்டுச் சகிப்புத் தன்மை ஊக்கப்படுத்தப்படவேண்டும். சமத்துவ மும் சமூக நீதியும் பேணப்படவேண்டும். அத்தகைய சமூகத்திலேயே  மத நல்லிணக்கம் நீடித்திருக்கும்.

இந்த நிலையில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாகக் கர்நாடக உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை அரசியல் உள் நோக்கம் கொண்டதாகும். இந்தத்  தீர்ப்பு, நமது அரசமைப்புச்சட்டம் மற்றும் நாட்டின் சட்டங்கள் உத்தரவாதப்படுத்தியுள்ள, அனைவருக்குமான கல்வி உரிமை மீதான தாக்குதலாக கருத வேண்டியுள்ளது. இந்தத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத  பல அம்சங்கள் உள்ளன. முஸ்லீம்  மாணவிகள் வகுப்பறைகளில் ``ஹிஜாப் அணியக் கூடாது என்கிற கர்நாடக அரசாங்கத்தின் மோச மான உத்தரவு அம்மாநிலத்தில் பள்ளி கல்லூரி களுக்குச் செல்லும் முஸ்லீம் பெண்களைப்  படிக்கவிடாமல் தடுக்கும் நோக்கமே தவிர வேறு அல்ல. அத்தகைய உத்தரவை உறுதிப்படுத்தி னால் சமூகத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை நீதிமன்றத்திற்கு தெரியாதா? 

கல்வி நிலையங்களுக்கு  முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதை நாட்டில் உள்ள எந்த மாநிலத்திலும் விதியை மீறிய ஒரு செய லாக எந்தக் காலத்திலும் யாரும்  கருதவில்லை.  இந்து மத வழிபாட்டுத்தலங்கள் நடத்தக்கூடிய கல்வி நிலையங்களில் கூட இதுபிரச்சனையாக இருந்ததில்லை. மேலும் ஹிஜாப் அணிவது தொடர்பாகக் கல்லூரிகளில் இயங்கும் குழுக்கள் தீர்மானிக்க உயர்நீதிமன்றம் உரிமை வழங்கி யுள்ளதால் கர்நாடகாவில் பாஜக தன் மதவெறி நிகழ்ச்சி நிரல்களை தீவிரப்படுத்தவே இது வழி வகுக்கும். இது அம் மாநிலத்தோடு நிற்கப்போவ தில்லை. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.  எனவே உச்சநீதிமன்றம் இது தொடர்பான மேல்முறையீடுகளை உடனடி யாக விசாரிப்பதோடு அரசமைப்புச்சட்டம் அளித் துள்ள உத்தரவாதங்களை உறுதிப்படுத்தும் வகையில் நீதி வழங்கவேண்டும்..