headlines

img

பாஜக எம்எல்ஏவின் வெறுப்பூட்டும் பேச்சு

ஜார்க்கண்ட் மாநில பாஜக சட்டமன்ற  உறுப்பினர் குஷ்வாஹா சஷி பூஷன் மேத்தா  என்பவர் தாடி வைத்தவர்கள், தொப்பி அணி பவர்கள் அல்லது மாட்டிறைச்சி சாப்பிடு பவர்கள் இந்து மதத் தலங்களுக்கு அருகில் கண்டால் அடித்துக் கொல்லப்படுவார்கள் என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த வெறித் தனமான பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருவது ஆபத்தானது. அந்த  சட்டமன்ற உறுப்பி னர் ஒரு கிரிமினல்.  பள்ளி ஆசிரியர் ஒருவரை கொலை செய்த வழக்கில் 2012 ஆம்ஆண்டு  கைதானவர். இருப்பினும் அப்போதைய பாஜக ஆட்சியில் காவல்துறை  போதிய ஆதாரத்தைத் திரட்டத்தவறியதால் வழக்கில் இருந்து தப்பித்தார். இப்படிப்பட்ட கிரிமினலுக்கு 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது என்றால் அக்கட்சியின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம்.  

தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் குற்றவாளிகளின் கூடாரமாக பாஜக உள்ளது. இதே  ஜார்க்கண்ட் மாநி லத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி என்ற இளை ஞரை பாஜக ஆட்சியின் போது 2016-ல் மதவெறி யர்களோடு இணைந்து காவல்துறையினரே அடித்துக் கொன்றனர்.  மின்ஹாஸின் கதறல் களை போன் மூலம் அவரது குடும்பத்தினரைக் கேட்க வைத்து உளவியல் ரீதியாக  சித்ரவதை செய்த கொடுமையை நாடு மறக்கவில்லை. வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம், மத்திய பிர தேசம், ஹரியானா உள்பட பல மாநிலங்களில்  மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர் கள் பலர் கடந்த காலங்களில் மத வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.  

வெறுப்புப் பேச்சுக்காக பாஜக எம்எல்ஏ  மேத்தா மீது இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் படவில்லை. பாஜகவுக்கு எதிரான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஆட்சியில் இருந்தாலும் கூட (ஜேஎம்எம்) பாஜக மீதான அதிகார வர்க்கத்தின் மென்மையான அணுகுமுறையே வழக்குப் பதிவு செய்ய தடையாக உள்ளது. வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மீது  காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப் படுவதில்லை.  

மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும்  மேத்தாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதோடு நிறுத்திக் கொள்ளாமல்  காவல்துறையை கொண்டு அவர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். வெறி யூட்டும் கருத்துக்களை தெரிவிப்போர்  யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்குவதாக அந்த  நடவடிக்கை அமைய வேண்டும்.