headlines

img

கொரோனாவை விட கொடிய தொற்று இது!

மகாத்மா காந்தி கொடியவன் கோட்சேயினால் சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “கோட்சேயின் வாரிசுகளுக்கும், அவர்களது தீய எண்ணங்களுக்கும், இந்திய மண்ணில் இட மில்லை என சூளுரைப்போம்” என்று பொருத்த மாக குறிப்பிட்டுள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலும், தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளார்.

ஆனால் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாசகர கூட்டத்தின் நச்சு சிந்தனை எந்தள வுக்கு ஊடுருவியுள்ளது என்பதையே கோவையில் நடந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தி நினைவுநாள் உறுதியேற்பு நிகழ்வுக்கு அனுமதி மறுத்து உறுதியேற்பு நிகழ்வை சீர்குலைக்க காவல்துறையினர் முயன்றுள்ளனர்.

மகாத்மா காந்தி உருவம் பொறித்த தட்டிகளை யும் அகற்ற முயன்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உட்பட பல்வேறு  அமைப்புகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உறுதியேற்பு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

உறுதியேற்பு வாசகத்தில் காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றான் என்ற வரலாற்று உண்மை இடம் பெற்றிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா என்பவர் கோபத்துடன் கொந்த ளித்து காந்தியை கொன்றது கோட்சே என்று கூறக் கூடாது என தடுக்க முயன்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், அப்படியென்றால் காந்தியை கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பிய தற்கு பதிலளிக்காத  அந்த அதிகாரி, வழக்கமாக ஆர்எஸ்எஸ் ஆசாமிகள் பயன்படுத்தும் வாசக மான யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

கோவையில் சிறுபான்மை மக்களுக்கெதிராக நடந்த வன்செயல்களின் போதே காவல்துறை யைச் சேர்ந்த சிலரிடம் காவிச் சிந்தனை ஊடுருவி யிருப்பது வெளிப்பட்டது. அதன் மிச்சசொச்சங் கள் இன்னமும் தொடர்கிறது என்பதையே கோட்சே வுக்கு ஆதரவாக கம்பு சுத்தியுள்ள காவல்துறை அதிகாரிகளின் போக்கு காட்டுகிறது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் அத்த னையிலும் ஊடுருவியுள்ள வகுப்புவாத நஞ்சு முற்றாக அகற்றப்பட வேண்டும். நீதித்துறையிலும் கூட இந்துத்துவா பேர் வழிகள் திட்டமிட்டு ஊடுரு வியுள்ளதை பல்வேறு தருணங்களில் பார்க்க முடிகிறது. மதவெறிக்கெதிராகவும், மதச்சார்பின் மையை நிலைநிறுத்தவும், அனைத்து தளங்களி லும் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள் ளது. குடிமைச் சமூகத்தை கைப்பற்றும் நோக்கத்து டன் ஆர்எஸ்எஸ் பரிவாரம் செயல்பட்டு வருகிறது. கொரோனாவை விட கொடிய இந்தத் தொற்றை தடுக்க மக்கள் ஒற்றுமையே மாமருந்து.