இந்தியா தமது மக்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் இன்று ஒரு முக்கியமான நாள் என்றும், உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி இயக்க மான இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் அறிவியல் சார்ந்தது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார். அத்துடன் இலவசமாக கொரோனா தடுப்பூசி பெறுவதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடு வதற்காக அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் நிலை யல்லவா ஏற்பட்டது. பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்ட போது, ஒப்புக் கொள்ளாத ஒன்றிய பாஜக அரசு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி, உத்தரவிட்ட பின்னரே இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு ஒத்துக் கொண்டது பெருமைக்குரியதல்ல.
அதற்கு முன்பு மக்களுக்கு தடுப்பூசி செலுத்து வதற்கு விலை நிர்ணயம் செய்தது. மாநில அரசுக ளுக்கு ஒரு விலையும், மருத்துவமனைகளுக்கு ஒரு விலையும் நிர்ணயித்தது. தடுப்பூசி செலுத்துவதற்கு ஆகும் செலவை மாநில அரசுகளின் மேல் திணித்து அவற்றின் நிதிச் சுமையை அதிகப்படுத்தியது. இப்ப டிப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் தடுப்பூசி கொள்கை கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் உதவுவதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் தடுப்பூசி உற்பத்தியை அரசு பொ துத்துறை நிறுவனங்கள் வசம் ஒப்படைக்காமல் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய அனு மதியை மோடி அரசு அளித்திருந்தது. அதுமட்டு மின்றி அவற்றில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு கூடுதல் விலைக்கு ஏற்றுமதி செய்யவும் அனுமதித்திருந்தது.
சொந்த நாட்டு மக்கள் கொரோனாவுக்கு பலி யாகிக் கொண்டிருந்தபோது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உள்நாட்டில் விற்பனை செய்ய வும் அனுமதித்த ஒன்றிய பாஜக அரசு இப்போது பெருமைப்படுவதாக கூறிக்கொள்வது விசித்திர மானதுதான். இது ஒரு அறிவியல் சார்ந்த இயக்கம் என்று சொல்வதும் கூட அதிசயமானதுதான். ஏனென் றால் இந்த அரசு புராணங்களையும், புனைவுகளை யுமே அறிவியல் என்று பிரகடனப்படுத்துவதும் அதற்காக நிதி ஒதுக்கி ஆய்வுகள் நடத்தச் சொல்வ துமே இதன் நடவடிக்கையாகவே இன்னும் இருந்து வருகிறது.
தற்போது 12 வயது முதல் 14 வயது சிறுவர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்னும் தொடங்க வில்லை. தொடங்கிய மாநிலங்களில் குறைந்த அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவே தகவல்கள் தெரிவிப்பதாக தடுப்பூசி செலுத்தும் திட்ட அதிகாரியான ஹிமான்சு கவுசல் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும் அங்கலாய்த்துள்ளார். பொதுவாக ஒரு திட்டம் துவங்குவதற்கு முன் அதற்குரிய ஏற்பாடுகளை திட்டமிட்டுச் செய்யாமல் விட்டுவிட்டு பின்னர் அங்கலாய்ப்பதில் அர்த்தம் ஏதுமில்லை. இது பெருமைப்படும் விசயமும் இல்லை.