இந்தியாவில் நாள் முழுவதும் சாப்பிட ஏதுவுமின்றி பட்டினியாக 67 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியோ கடந்த 9 ஆண்டுகளில் 24 கோடியே 82 லட்சம் பேரை வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக மார்தட்டுகிறார். அரசியல் ஆதா யத்திற்காக, பச்சிளம் குழந்தைகளின் பட்டினிக் கொடுமையை மறைப்பது தேசிய அவமான மாகும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொதுசுகாதாரம் குறித்த ஆய்வாளர் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் இந்த அவலம் தெரிய வந்திருக்கிறது. இதையும் ஒன்றிய அரசு வழக்கம் போல் இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்காமல் மேலை நாடுகள் செய்யும் சதி எனப் புறந்தள்ள முடியாது. காரணம் இந்த ஆய்வில் பயன் படுத்திய தரவுகள் அனைத்தும் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட 2019-2021-ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதா ரத்துறை கணக்கெடுப்பின் தரவுகளே ஆகும்.
அந்த தரவுகளின் அடிப்படையில், பிறந்து 6 மாதம் முதல் 24 மாதம் வரையிலான பச்சிளம் குழந்தைகள் குறித்த விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் பால் உள்ளிட்ட எந்தவித உணவும் இல்லாமல் பட்டினியாக 24 மணி நேரமும் இருந்து வருவது தெரிய வந்தி ருக்கிறது. இந்த குழந்தைகள் தாய்ப்பால் குடித்தி ருந்ததால் கிடைக்கப் பெற்ற குறைந்தபட்ச கலோரிகள் அவர்களைப் பாதுகாத்திருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் 24 மணி நேரம் பட்டினியாக இருக்கும் பச்சிளம் குழந்தைகளின் எண் ணிக்கை 19.3 சதவிகிதமாக இருக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் 92 நாடுகளு டன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலை யில் இருக்கும் கினியா (21.8 சதவிகிதம்), மாலி (20.5 சதவிகிதம்) ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா 19.3 சதவிகிதத்துடன் இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றிய அரசின் கொள்கைகளே. வறுமையின் காரணமாகவே ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படுகிறது.
பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் போதாது. தாய்ப்பாலுடன் போதுமான புரதம், உயிர்ச்சத்துகள், தாதுகள் அடங்கிய ஊட்டச்சத்து மிக்க உணவு தேவை. ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள தாய்மார்கள் கடுமை யாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
வறுமையும், ஊட்டச்சத்துக் குறைபாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின் றன. ஆனால், ஒன்றிய அரசு வறுமை விலகி விட்டதாக வாய்ச் சவடால் அடிக்கிறது.