headlines

img

மேலும் மேலும் சுமை

தமிழகத்தில் உள்ள  28 சுங்கச் சாவடிகளில்   15 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்தியா விலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கை யிலான சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்பதைப் பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகளும் அரசியல்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை நெடுஞ் சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில்  ஆண்டுதோறும் இரு கட்டமாகக் கட்ட ணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்கக்கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் தலையில் வேறு வகையில் திணிக் கப்படுகிறது.  வாகனங்களில் எடுத்துச் செல்லப் படும் சரக்கு மற்றும் கூரியர் கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  30 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை உயர்த்திவிட்டன.  

 மாநிலத்தில்  120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  பார்சல், கூரியர் சேவையில் ஈடுபட்டு வரு கின்றன. இந்நிறுவனங்கள் பயன்படுத்தும் லாரிகள், சரக்கு ஆட்டோக்களுக்கான டீசல், உதிரிபாகங்கள், இரண்டாம் நபர் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை ஒன்றிய அரசு ஏற்கனவே உயர்த்தி விட்டது. இவற்றுடன் சுங்கக்கட்டண உயர்வும் சேர்ந்துவிடுவதால் அந்த நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.   10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம்,  400 கி.மீ  தூரம் வரை, 150 ரூபாயாக இருந்த நிலை யில், 170 ரூபாயாகவும், 600 கிமீ  தூரம் வரை, 170 ரூபாயாக இருந்த கட்டணம், 200 ரூபாயாகவும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.  

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்ச மாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காகச் செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை  மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூ லிக்கப்பட வேண்டும்; அதன்பின்னர் பராமரிப்புக் கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதேபோல் பெரும்பாலான சாலை களுக்குச் செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. அத்தகைய சாலைகளில் பராமரிப்புக் காக 40விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூ லிக்கப்பட வேண்டும். ஆனால், அனைத்து சாலை களிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூ லிக்கப்படுவது நியாயமல்ல. 

இக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலைகளும் மேலும் அதிகரிக்கும். எனவே இந்த சுங்கக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.