குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பஞ்சாப்பை போல, குஜராத்தில் வெற்றிபெற்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமா கத் தரப்படும் என்றும் 2021 டிசம்பர் 31 வரை பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணங்கள் செலுத்தப்படாமல் இருந்தால், அவை தள்ளு படி செய்யப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறி வித்துள்ளது. இது வாக்காளர்களில் கணிசமான பிரிவினரைக் கவர்ந்துள்ளதாகச் செய்தி கிடைத்தவுடன் பாஜக கலக்கமடைந்தது.
இலவசங்கள் கூடாது என்று வாதிடும் பாஜக, அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு இலவசத் திட்டங் களை தற்போது அறிவித்து வருகிறது. பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஆண்டுக்கு இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அதில் அடக்கம். கடந்த ஜூலை 16ஆம் தேதி பந்தல்கண்ட் அதிவேக விரைவுச் சாலையைத் துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்கள் ‘ரேவரி (இலவச) கலாச்சாரத்தில்’ ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது என்றார். இது மட்டுமல்ல பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சாத்தியமில்லாத இலவசங்களை வழங்கு வதாக வாக்குறுதி அளித்து தேர்தல் நடைமுறை களையே அரசியல் கட்சிகள் குலைப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மாநில அரசுகள் மக்களுக்கு வழங்கும் இலவ சத் திட்டங்களைப் பொறுத்தவரை சரியா? தவறா? என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் விலையில்லா மல் வழங்கப்படும் திட்டங்கள் ஒவ்வொரு பிரி வாகப் பார்த்து அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுவ தால் கிராமப்புற பள்ளிகளில் உயர் கல்வி கற்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்த தொலைக்காட்சி, பின்னர் அத்தியா வசியப் பொருளாக மாறியது. மிக்சி, கிரைண் டர்கள் இலவசமாக வழங்கப்பட்டதன் மூலம் இல்லத்தரசிகளின் பணிச்சுமை கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இலவசங் கள் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் மாநி லத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இவ்வளவு நலத் திட்டங்களைச் செயல் படுத்திய பிறகும் மாநில அரசின் நிதிப் பற்றாக் குறை 3.6 சதவீதம்தான். ஆனால், ஒன்றிய அரசின் அளவு இதைவிட அதிகம். ஒன்றிய அரசின் கடன் கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது? மக்களுக்கு இலவசம் ஏதும் கொடுக்காமல் எப்படி இவ்வளவு கடன் வந்தது? இலவசத் திட்டங்கள் என்பவை வாக்குகளைக் குறிவைத்து அளிக்கப்படுவ தில்லை; மாறாக மக்களின் நிலையை மேம் படுத்தும் நோக்கிலேயே அளிக்கப்படுகின்றன என்பதை அதை எதிர்ப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.