headlines

img

அரிசி மீது ஜிஎஸ்டி நியாயமற்ற நடவடிக்கை

ஒன்றிய பாஜக அரசின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. வரி போடாமல் எந்த பொருள் இருக்கிறது என்று ஆராய்ந்து ஆராய்ந்து வரிபோட்டுக்கொண்டே இருக்கிறது.  ஏற்கனவே அத்தியாவசியப் பொ ருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்படும் மக்களை அரசு மேலும் மேலும் கசக்கிப் பிழிகிறது. முதலில் வணிக சின்னம் முத்திரையிடப்பட்ட பொருட்கள்  மீது ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு  திணித்தது.   இப்போது சாமானிய மக்கள் வாங்கக்கூடிய  பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீது  5 விழுக்காடு  ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இது  நியாயமற்ற நடவடிக்கையாகும். அரசின் தவறான வரிக்கொள்கையால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் இந்த வணிகத்தை நம்பி யுள்ள சிறு, குறு. நடுத்தர வர்த்தகர்களும், ஏழை மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 4ஆயிரம் அரிசி ஆலைகள் ஞாயிறன்று  முழு அடைப்பு போராட் டத்தை நடத்துகின்றன.  15 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அரிசி மொத்த விற்பனை கடைகள், 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கடை கள் அடைக்கப்படவுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடை கின்றன.  இந்த வரிமுறையால் வணிகர்களுக்கும் பயன் இல்லை, மாநில அரசுக்கும் பயனில்லை. பொதுமக்களுக்கும் பயனில்லை. இந்த வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பை மாநிலங்களுக்கு வழங்குவ தாக உறுதியளித்த அரசு அந்த வாக்குறுதியை யும் நிறைவேற்றவில்லை. 

ஜிஎஸ்டியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜனே கூறுகிறார். இந்த வரி உயர்வு முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் எடுக்கிறதா அல்லது ஒன்றிய அரசு எடுக்கிறதா?   நுகர்வோருக்கு நல்ல தரமான பொருட்களைக் கொடு என்று கூறிவிட்டு, அவ்வாறு கொடுத்தால் அதற்கும் 5 விழுக்காடு வரி விதிப்பது என்ன நியாயம் என்று சிறு வணிகர்கள் கேட்கிறார்கள். பெருந்தொற்று காரணமாக வர்த்தகர்கள் பலர் பல்வேறு  சிரமங் களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அரிசி மீதான  ஜிஎஸ்டி வரி அனைத்துத்தரப்பினரையும்  பாதிக்கும். மேலும் வணிகர்கள் தொழிலை கை விடும் சூழலை நோக்கித் தள்ளப்படுவார்கள்.   

நமது நாட்டை பொறுத்தவரை வரிகளைக் குறைத்து பொது மக்களின் வாங்கும் சக்தியைத் தான் அரசு அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். அதை விட்டுவிட்டு பேனா மை, கத்தி, பிளேடு, அரிசி, கோதுமைக்கு 5 விழுக்காடு வரி விதிப்பது மக்கள் மீதான தாக்குதலே. எனவே  அரிசி மீதான 5 விழுக்காடு  வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடி யாக  திரும்பப் பெற வேண்டும்.