headlines

img

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திர திட்டம் சட்டப்பூர்வமாக செல்லுமா என்ற வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அர சியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

மோடி தலைமையிலான  பாஜக அரசு பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை அளித்து திருப்திப்படுத்துகிறது. அதற்கு ஈடாக பெரும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பாஜகவுக்கு பணத்தை வாரி இறைக்கின்றன. 2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில்  7 தேசியக் கட்சிகளும் 24 பிராந் தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இந்த ரூ.9,188 கோடியில் பாஜக பங்கு மட்டும் தோராய மாக ரூ.5272 கோடி. அதாவது மொத்த நன்கொடை யில் 58 விழுக்காடு அக்கட்சிக்கு சென்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தேர் தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதி யில் வெளிப்படைத் தன்மையை அழித்து விடும் என்றும் இந்திய அரசியலில் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்த உதவும் என்றும் கூறியிருந்தது.  இதன்மூலம், அர சியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ‘ஷெல் நிறுவனங்களை’ (போலிக் கம்பெனி கள்) திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 

கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர் தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று ரிசர்வ் வங்கியும்  எச்சரித்தது. தேர்தல் பத்திரங் கள் மூலமாக அரசியல் கட்சிகள்  நன்கொடை யாக பெற்ற பணம், அதை கொடுத்தவர்கள் யார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தத் திட்டம் அரசியல் கட்சிகளுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அனா மதேய நிதியுதவி வருவதற்கான வழியை  ஏற் படுத்தியுள்ளதால் ஊழல் சட்டப்பூர்வமாக் கப்பட்டுள்ளது. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பதை ரிசர்வ் வங்கி  தெரியப்படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன் றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்தது. தேர்தல் பத்திரத்தில் நன்கொடை யாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியல மைப்பின் 19(1)(ஏ)பிரிவின் கீழ் ஒரு குடிமகனின் ஒரு தகவலை தெரிந்துகொள்ள உள்ள உரி மையை மீறும் செயலாகும். எனவே கறுப்புப் பணத்தை ஊக்குவிக்கும் தேர்தல் பத்திரங்களை தடை செய்வது குறித்து உச்சநீதிமன்றம் கண்டிப் பான  உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.