இளைஞர்கள் புதிய சக்தி, வளர்ச்சிக்கு அடிப்படை, இந்தியாவின் சாரதி என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை புகழ்ந்திருக்கிறார். செவ்வாயன்று நாடு முழு வதும் 45 இடங்களில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்கள் காணொலி மூலம் வழங்கி யிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் இதே நாளில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்குகிற நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவ்வாறு பணி நியமன கடிதம் வழங்குவதை பெருமையாக ஒன்றிய அரசு விளம்பரம் செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அமைச்ச ரவை எடுத்த முடிவின்படி பத்து லட்சம் வேலை கள் 18 மாதங்களில் வழங்கப்படும் என்பதன் செய லாக்கமே இது என்று ஒன்றிய அரசு சொல் கிறது. ஆனால் கடந்த 2020, 21 ஆம் ஆண்டு களில் இந்திய இளைஞர்களிடையே வேலை யின்மை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழி லாளர் அமைப்பு கூறியிருந்தது.
இந்த நிலையில்தான் மாநில தேர்தல்கள் வருவதை மனதில் கொண்டு இந்த 10 லட்சம் வேலைகள் வழங்குவதை பிரமாதப்படுத்தி பேசத் துவங்கினர் பிரதமரும், ஒன்றிய அமைச்சர்க ளும். ஆனால் அவர்கள் முடிவெடுத்த அந்த சமயத்திலேயே ஒன்றிய அரசின் பல்வேறு துறை களிலும் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1.5 கோடிப் பேருக்கு நூறு நாள் வேலை மறுக்கப்பட்ட கொடுமையும் இந்தக் காலங்க ளில் நடந்தது. ஆறு மாதங்களில் 1.46 லட்சம் வேலைகள் ஒன்றிய அரசால் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அப்படியென்றால் நாட்டின் வேலை உருவாக்கும் திறன் எந்தளவு உள்ளது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
எதற்காக இத்தனை வேகம் என்றால் தேர்தல் வந்தால் பாஜகவும் அதன் பரிவாரங்களும் அமளிதுமளி செய்வது வழக்கமானதுதான். நாட்டில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு இருக்கிற வேலைக ளும் காலியாக்கப்பட்டன. ஆயினும் தேர்தல் காலத்தில் மக்களை சந்திக்க வேண்டியி ருக்கிறதே என்ன செய்ய என்றுதான் இந்த குயுக்தி வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
உண்மையான அக்கறையோடு இவர்கள் செயல்படுவதாக இருந்தால் 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக சொல்லப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கும். அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால், இதுவரை 15 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் இவர்கள்தான் தேர்தல் காலங்களில் வாக்குறு திகளை வாரி வழங்குவதும் அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லையென்று கூறுவதும் வாடிக்கையாகச் செய்பவர்களாயிற்றே! குஜராத் தேர்தல் முடிந்ததும் அடுத்து 2024 தேர்தலின் போதுதான் மீண்டும் இந்த நியமனங்கள் வந்தாலும் வரலாம்.