headlines

img

மைனஸ் கூலி... கிரிமினல் குற்றம்

தேசிய அளவிலான குறைந்தபட்ச கூலி நிர்ணய வரையறையை திருத்தி அமைக்காமல் ஆறாண்டு காலமாக நரேந்திர மோடி அரசு இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் வயிற்றில் அடித்து வருகிறது. 

1948 குறைந்தபட்சக் கூலிச்சட்டமானது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுக்கான குறைந்தபட்சக் கூலியை மாநில அரசுகளே நிர்ணயித்து அறிவிக்கலாம் என்று அதிகாரம் அளித்துள்ளது. எனினும், இரண்டா ண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சகம், தேசிய அளவிலான குறைந்தபட்சக் கூலி வரையறையை அறிவித்து வருகிறது. மாநிலங்கள் நிர்ணயிக்கும் கூலி இந்த வரையறைக்கு கீழே சென்றுவிடக்கூடாது என்ற நிலையில், ஒன்றிய அரசு அறிவிக்காமல், மாநில அரசுகளும் நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாமதம் ஆறாண்டு கால மாக நீடிக்கிறது.

கடைசியாக 2017 ஜூலையில் தேசிய குறைந்தபட்ச கூலி வரையறை நாளொன்றுக்கு ரூ.176 என நிர்ணயித்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த வரை யறையும் கூட தொழிலாளர்களின் உழைப்புக் கும், தேவைக்கும் ஏற்ற கூலி அல்ல என்பதே உண்மை. இந்தியாவில் குறைந்தபட்சக்கூலி என்பது, 1970ஆம் ஆண்டில் அப்போதைய திட்டக் கமிஷன் வறுமைக்கோடு பற்றி மதிப்பீடு செய்து தயாரித்த வரையறையின் அடிப்படையி லேயே இப்போதும் தீர்மானிக்கப்படுகிறது. வறு மைக்கோடு என்பது, ஒரு நபர் ஒரு நாளைக்கு தேவையான கலோரி சக்தி அளிக்கக்கூடிய உணவு உட்கொள்வதற்கு மட்டுமான தொகை யை பெற முடிகிறதா என்பதை மதிப்பீடு செய்து  தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இதில் அந்த நபருக்கு தேவையான சுகாதாரம், கல்வி, போக்கு வரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட இதர வாழ்வி யல் தேவைகளை திட்டக் கமிஷன் கணக்கில் கொள்ளவில்லை. 

எனவே இந்த மதிப்பீட்டின்படி மேற்கொள் ளப்படும் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம், தற்போது அதிகரித்துள்ள விலைவாசி, பணவீக்க விகிதம், அன்றாட வாழ்வியல் நெருக்கடிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் ஒப்பிடும் போது,  இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் உண்மைக் கூலியில் எந்த உயர்வையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, உழைப்புச் சுரண்டலே அதிகரித்துள்ளது. 

உண்மைக் கூலியில் உயர்வை ஏற்படுத்தாத அந்த மிக மிக குறைந்தபட்சக் கூலியையும் கூட உயர்த்தாமல், மாநிலங்களையும் உயர்த்த விடா மல் ஆறாண்டுகளாக மோடி அரசு நிறுத்தி வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றமே ஆகும். 2022-23 பொருளாதார ஆய்வறிக்கை, தொழிலா ளர்களின் உண்மைக் கூலி வளர்ச்சியானது மைனஸ் விகிதத்தில் செல்கிறது என்பதை அம்ப லப்படுத்திய பிறகும் பாஜக அரசு தேசிய  குறைந்த பட்சக் கூலி வரையறையை திருத்தி அமைக்கா மல் இருப்பது மன்னிக்க முடியாதது.