மணிப்பூர் கலவரம், வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திட வேண்டு மென்றும் பிரதமர் நரேந்திர மோடி விளக்க மளிக்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடூ ரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசு சிபிஐ விசார ணைக்கு வழக்கை மாற்றியிருக்கிறது. ஆனால் தொடர்புடைய பெண்கள் தரப்பு இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆயினும் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கை அசாம் மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமென்று கோரியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் விரும்பும் வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்று கூறியிருக்கிறார்.
மணிப்பூர் சென்று திரும்பிய “இந்தியா” கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் திங்க ளன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு தயா ராகவே வந்தனர். ஆனால் மக்களவையில் அனு மதி மறுக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப் பட்டது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் பிரிவு 267ன் கீழ் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. பிரிவு 176ன் கீழ் விவாதிக்க லாம் என்று அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துக் கொள்ளாத தால் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவ தற்கு வராமல் ஓடுகின்றன என்றும் வீதியில் சென்று கூச்சலிடுகின்றன என்றும் கூறியிருக்கி றார். அவையில் விவாதிக்க வேண்டுமெனில் அரசின் சார்பில் பொறுப்பாக பிரதமர் பதில ளிக்க வேண்டுமென்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, ஆனால் வெறுமனே விவாதம் நடத்தி விட்டுப் போகலாம். பொறுப்பாக யாரும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ணத்திலேயே ஒன்றிய அமைச்சர் கள் நடந்து கொள்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் பிரிவு 267ன்கீழ் விவாதிக்க வேண்டுமென்றும் பிரதமர் விளக்கமளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு இணங்காமல் அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்து விட்டார். அவைக்கு வந்து பதிலளிக்க பயந்து ஓடிக் கொண்டிருப்பது ஒன்றிய அரசா? அல்லது எதிர்க்கட்சிகளா? ஆனால் திசை திருப்பும் நோக்கில் அமைச்சர் அனுராக் தாக்கூர் எதிர்க் கட்சிகள் விவாதத்திற்கு தயாராகயில்லை என்று குற்றம் சாட்டியும் மேலும் வீதிகளில் சென்று கூச்சலிடவே விரும்புகின்றன என்றும் அவதூறு செய்கிறார். மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண விரிவான விவாதமும் பிரதமரின் பொறுப்பான பதிலும்தான் முக்கியம். இதில் அவைக்கு வராமல் பம்முவதும், ஒளிவதும் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.