கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு வில் மதச்சார்பற்ற கட்சிகளின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று துவங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சி களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாஜகவை ஒன்றிய ஆட்சி அதிகாரத்தி லிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்க த்தின் அடிப்படையில் பீகார் தலைநகர் பாட்னா வில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டம் நடை பெற்றது. இதில் ஆறு மாநில முதல்வர்கள் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட னர். பெங்களூரு கூட்டத்தில் மேலும் பல கட்சி களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
பாட்னா கூட்டம் நடந்து முடிந்தவுடனேயே பிரதமர் மோடி முதல் ஒன்றிய உள்துறை அமை ச்சர் அமித்ஷா வரை பதற்றமடைந்தனர். இந்தக் கூட்டம் பயன்தராது என்று கூறினர். ஆனால் இந்தக் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஆலோ சனை நடைபெற்று அதன் தொடர்ச்சியாகவே பெங்களூரு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த தொடர் ஆலோசனைக் கூட்டங்களால் பீதியடைந்துள்ள பாஜக தங்களிடமும் வலு வான கூட்டணி உள்ளது போல காட்டிக்கொள்ள முயல்கிறது. பெங்களூரு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஜூலை 18 அன்று தேசிய ஜன நாயகக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் நடை பெறும் என்று பாஜக தலைவர் நட்டா அறிவித்துள் ளார். இப்படி கூட்டணி இருப்பதே அவர்களுக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் குறித்து எப்போதாவது விவாதித்தது உண்டா? கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களை கேட்டதுண்டா? சொந்தக் கட்சிக் கூட்டத்தில் கூட எத்தகைய ஆலோசனையும் பாஜக நடத்துவதில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்லும் ஆலோசனைகளை மட்டுமே சிரமேற்கொண்டு மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவதால் ஓட்டை உடைசல் கட்சிகளைக் கொண்டு தங்களிட மும் கூட்டணி இருப்பது போல பாஜக காட்டிக் கொள்ள முயல்கிறது. சிவசேனையை உடைத்து உருவாக்கப்பட்ட ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து உருவாக்கப்பட்ட அஜித் பவார் பிரிவு, பாஜகவினால் உடைக்கப்பட்ட ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியின் இருபிரிவுகள் போன்ற ‘கட்சிகளைக்’ கொண்டே தேஜகூ கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவை உடைத்த பாஜக அதில் எடப்பாடிபழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு இல்லை. இந்த கோட்பாடற்ற கூட்டணியின் கூட்டம் ஏமாற்றத்திலேயே முடியும். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்போவது உறுதி.