headlines

img

இடிக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடர் போன்று அராஜகமாக நடத்தப்பட்ட கூட்டத் தொடர் வேறு எதுவும்  இருக்க முடியாது. அந்த  அளவுக்கு ஜனநாயக நெறிமுறைகள் ஆளுங் கட்சியினரால் காலில் போட்டு மிதிக்கப் பட்டுள்ளன.

ஜூலை 20 துவங்கி ஆகஸ்ட் 11  வரை  நடை பெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மக்களவை 43 சதவீதமும், மாநி லங்களவை 55சதவீதமும் மட்டுமே நடந்துள்ளன. மக்க ளவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் தவிர பெரும்பாலான நேரம் அவையில் அமளி நிலவியுள்ளது.  மாநிலங்களவையும் முழுமையாக செயல்படவில்லை. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பிடிவாதப் போக்கே காரணம் ஆகும். 

மணிப்பூர் நிலவரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை யை அவர் கடைசி வரை ஏற்க மறுத்துவிட்டார்.  மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் பேச வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது கூட அவர் ஓரிரு நிமி டங்கள் மட்டுமே மணிப்பூர் குறித்து பேசினார். நாடாளுமன்றத்தை இந்த அளவுக்கு அலட்சி யம் செய்யும் ஒரு பிரதமரை நாடு இதுவரை கண்டதில்லை. 

அவையில் ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்திக் கொண்டு 23 மசோதாக்கள் பெரும்பாலும் விவாதமின்றி நிறைவேற்றப் பட்டுள்ளன. அரசியல் சட்ட கட்டமைப்பையே மாற்றக்கூடிய சில மோசமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  பிரிட்டிஷ் கால  சட்டங்களை மாற்றுகிறோம் என்று சொல்லி விட்டு அந்நிய ஆட்சிக் காலத்தைவிட கொடூர மான சட்டங்களை கொண்டுவர மோடி அரசு முயல்கிறது. அதிலும் கூட மொழித் திணிப்பில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது.

புதுதில்லி நிர்வாக சீர்திருத்த மசோதா, வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, சுரங்கம் மற்றும் தாதுபொருள் கட்டுப்பாடு திருத்த மசோதா போன்றவை பெரும்பாலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்ப தாகவும், இயற்கை வளங்களை கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்ப்பதாகவும்  அமைந்துள் ளன. பிரதமர் பேச்சின் போது குறுக்கிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள் ளார். இதுவும் இதுவரை  நடந்திராத ஒன்றாகும். நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய  வர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.