headlines

img

பொய்யன்றி வேறில்லை

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில், 10 மடங்கு அதிகரித்துள்ளதாக வும்  இதனால், விவசாயிகளின் வருவாய் உயர்ந் துள்ளது என்றும்  பிரதமர் மோடி  கூறியிருக்கிறார். அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலேயே ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.  புதுதில்லியில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், “விவசாயிகள், இடுபொருட்கள் விலை யேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தாகக் கூறியுள்ளார். விவசாயத்தை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டும்.சமூகத்தி லும் அவர்களுக்குச் சரியான அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராமங்கள் மறையத் தொடங்கினால் நாம் பெருமையாகப் பேசும் பண்பாடு, நாகரீகம் அழிந்து விடும்’’ என்று அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள ஒன்றிய அரசின் கொள்கைக்கு எல்லா வகையிலும் முட்டுக்கொடுக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் நிர்வா கிகளே உண்மையை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் எத்தனை விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்பதை நாடாளுமன்றத்தில் அரசு தெரி விக்கவேண்டும். எத்தனால் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் கரும்பு, மக்காச் சோளம் அதிகமாக  விளையக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இந்த மாநிலத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 7486 விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டனர்.  இம்மாநிலத்தில் பெருந்தொற்று ஏற்பட்ட கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும்  5579 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

விவசாயிகள் வருவாய் அதிகரித்திருந்தால் இத்தனை விவசாயிகள் ஏன் சாக வேண்டும்? இந்த கேள்விக்குப் பிரதமரிடம் பதில் இருக்கிறதா?  திடீரென ஏற்படும் புயல், பருவமழை பொய்த்துப் போவது, வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பால் கொட்டித்தீர்க்கும் மழை ஆகியவற்றால் பயிர்கள் நாசமாகி விவசாயிகள் நட்டமடைந்து தற்கொலை செய்துகொள்வது ஒருபுறம் இருந்தாலும் அரசின் கொள்கையால் உயிரிழக்கும் விவசாயிகளே அதிகம். கடுமையாக உழைத்து விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலையை ஒன்றிய அரசு இன்னும் உத்தரவாதப் படுத்தவில்லை.  விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற் றப்படவில்லை.  

சுயசார்பு என்ற சொல்லை ஒருபுறம் பயன் படுத்திக்கொண்டே மறுபுறம் குறைந்தபட்ச ஆதார விலையை கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் நிலையை அரசு ஏற்படுத்தி விட்டது. இதனால் விளைபொருட்களைக் குறைந்த விலைக்குத்  தனியாரிடம் விற்கும் பரிதாபமான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நட்டமடையும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதுதான் நாடு முழுவதும் உள்ள எதார்த்தமான நிலை. இதை மறைத்து விட்டு  விவசாயிகளின் வரு வாய் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.