ஒன்றிய ஆளும் கட்சியான பாஜக 2021-22 ஆம் ஆண்டு பெற்ற நன்கொடை 154 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி பாஜக மொத்தம் 1917 கோடி வசூலித்துள்ளது. ஒட்டு மொத்தமாக கட்சி கள் பெற்றுள்ள நன்கொடை பாஜக பெற்றுள்ள நன்கொடை மட்டும் 58 சதவீதம் அளவுக்கு உள்ளது. இதற்கடுத்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெற் றுள்ள நன்கொடை ரூ.541.2 கோடியாக உள்ளது.
ஆட்சிக்கு வந்தது முதல் கார்ப்பரேட் முதலாளி களின் கருணையுடன் தொடர்ந்து பாஜக முதலி டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பத்தி ரங்களின் மூலம் வசூலித்த தொகை மட்டுமே இவ்வளவு என்றால், அந்தக் கட்சி கருப்புப் பணமாக பெற்ற தொகை எவ்வளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறு வதை தடை செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. ஆனால் பாஜக தலைமையிலான அரசு இந்த நன்கொடை வசூலை சட்டப்பூர்வமாக்கியுள்ள தோடு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு நிதி மசோதாவுடன் தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்திய பாஜக கூட்டணி அரசு 2018ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து மட்டுமே பெற முடியும். தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவ னங்கள் எந்தக் கட்சிக்கு கொடுக்கப்பட்டது என் பதை ஒன்றிய அரசினால் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அந்நிறுவனங்க ளை மிரட்டி நன்கொடை வசூலிப்பதோடு மட்டு மின்றி எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை தரும் நிறு வனங்களை மிரட்டவும் ஒன்றிய அரசினால் முடியும்.
இந்தத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தேர்தல் பத்திரங்களை வாங்க கருப்புப்பணத்தை பயன்படுத்துவதை அரசு கண்காணிக்கும் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு செய்யப்படவில்லை. பத்திரத்தை வாங்குபவரோ அல்லது பெறுபவரோ யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்பதால் நன்கொடையாளரின் அடையாளம் மறைக்கப்படுகிறது. இந்த முறை ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
மோடி அரசு கொண்டு வந்த திருத்தத்தின்படி வெளிநாட்டு நிறுவனங்கள்கூட இவ்வாறு நன்கொடை அளிக்கலாம். இதனால் ஷெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பாஜக நன்கொடையை குவித்து வருகிறது.
கார்ப்பரேட் முதலாளிகளிடம் நன்கொடை களை பெறும் பாஜக அவர்களுக்கு கைமாறாக வரிச்சலுகை, மானியம் என வாரி வழங்குகிறது. இந்த முறை கூட்டுக் களவாணி முதலாளித்து வத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. வித்தியாச மான கட்சி என்று கூறிக் கொண்ட பாஜக வித்தியா சமான முறையில் நன்கொடை பெறுவதில் தான் வித்தியாசம் காட்டுகிறது. ஜனநாயகத்தை பண நாயகமாக்கிக் கொண்டிருக்கும் பாஜக அதன் மூலம் மக்களாட்சி மாண்புகளை அரித்துக் கொண்டிருக்கிறது.