headlines

img

எது வலிமை-பாதுகாப்பு?

பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய அமைச்சர் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் தற்போது தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 27 ஞாயிறன்று மது ரையில் நடந்த பாஜக முன்னாள் ராணுவத்தி னர் பிரிவின் மாநில மாநாட்டில் துவக்கவுரை யாற்றும் போது, பாஜக ஆட்சியில் ராணுவத்தை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையால் அதன் வலிமை அதிகரித்துள்ளது என்றும் ராணு வத்துக்குத் தேவையான தளவாடப் பொருட்கள், தொழில்நுட்பக் கருவிகள் கொள்முதல் செய்ய வும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறி யிருக்கிறார்.

ஒரு நாட்டின் வலிமை என்பது வெறும் ராணு வத்தின் வலிமை மட்டுமல்ல, மக்களின் ஒற்றுமை யும் ஒருங்கிணைப்பும் உணர்வுப்பூர்வமான எழுச்சியும் தான் உண்மையான வலிமையாகும். ராணுவத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் ரபேல் விமானம் வாங்கியதில் முறை கேடு நடந்துள்ளது என்பதை பிரான்ஸ் நாட்டு நீதிமன்றமே வெளிப்படுத்தியது. முறையான விசாரணைக்கு இந்திய பிரதமர் மோடி ஒத்துழைக்க வேண்டுமென்றும் கூறியது. இத்த கைய வகையில்தான் இவர்களது வலுப்படுத்தும் காரியம் நடந்து கொண்டிருக்கிறது. 

நாட்டை வலுப்படுத்துவதற்குப் பதில் பாஜக வுக்கு போஷகர்களாக விளங்கும் அதானி,  அம்பானி வகையறாக்களை வலுப்படுத்துகிற காரியமே நடந்து கொண்டிருக்கிறது.

நாட்டில் தேசபக்தியை பாஜக ஊக்குவித்து வருகிறது என்றும் பாஜக தான் முன்னாள் ராணுவத்தினர் பிரிவை தொடங்கியது என்றும் வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஆனால் பாஜகவும் அதன் பரிவாரங்களும் நாட்டை  இந்துத்துவா வெறிப் பேச்சுகள், நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தையே உரு வாக்கி வருகின்றன. வெறுப்புப் பேச்சுகள் மூலமும் வன்முறைத் தாக்குதல்கள் மூலமும் சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி இந்துக்க ளும் கூட பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என அனைவரும் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் என்று வி.கே.சிங் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் ஒரு முன்னாள் ராணுவ வீரர், “நாட்டு மக்க ளைப் பாதுகாத்தேன். ஆனால் எனது மனைவி யைப் பாதுகாக்க முடியவில்லையே” என்று கண்ணீர் மல்க பரிதவிப்போடு சொன்னதைக் கேட்டால் பாஜகவினராலும் அதன் பரிவா ரங்களாலும் தான் நாட்டு மக்களுக்கு ஆபத்து என்பது  உணர்ந்து கொள்ள முடியாதா? அவர்கள் எப்படி பாஜகவில் இணைந்து செய லாற்றுவார்கள்? 

வி.கே.சிங் மட்டுமல்ல, இன்னும் பலரும் எத்தனை முறை வலம் வந்தாலும் என்னவெல்லாம் பேசினாலும்  தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிடம் ஏமாற மாட்டார்கள்.