உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த குற்றவாளி ஆசிஷ் மிஸ்ரா, அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டி ருப்பது இந்திய விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் எழுச்சியின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரியில் 2021 அக்டோபர் 3 அன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசின் அமைச்சராக உள்ள அஜய் மிஸ்ராவின் மகனான ஆசிஷ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள், விவசாயிகள் மீது கொடூரமான முறையில் காரை ஏற்றி படுகொலையில் ஈடுபட்டனர். நான்கு விவ சாயிகளும் ஒரு பத்திரிகையாளரும் என 5 பேரை பட்டப்பகலில் பகிரங்கமாக அவர்கள் படுகொலை செய்த காட்சிகள் சாட்சியங்களாக இன்னும் மக்கள் மனங்களில் நின்று கொண்டிருக்கின்றன. பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஆசிஷ் மிஸ்ரா மற்றும் இதரர்கள் மீது பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி) மற்றும் இதர கடும் குற்றங்களுக் கான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில்தான் அலகாபாத் நீதிமன்றம் மிக வும் துரதிருஷ்டவசமான முறையில் இவர்களுக்கு பிணை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதல்ல என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுதான், லக்கிம்பூர்கேரி படு கொலையின் போது நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக விசாரணை செய்து, அங்கு நடந்த சம்பவம் ஒரு விபத்து அல்ல; முன்கூட்டியே தெளிவாக திட்ட மிடப்பட்டுள்ள ஒரு சதிச் செயல் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து வழக்கிற்கு வலு சேர்த்தது. ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிணை அளித்து கொடுத்துள்ள தீர்ப்பு சிறப்பு புலனாய்வுக்குழுவின் ஆய்வுக்கு விரோதமானதாக வந்துள்ளது.
இந்த வழக்கில், நேரடியாக விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலையை நிகழ்த்திய ஆசிஷ் மிஸ்ரா மட்டுமல்ல; இந்த சதிச்செயலுக்கு திட்டமிட்டுக் கொடுத்த, மூளையாக விளங்கிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சரும் அவரது தந்தையுமான அஜய் மிஸ்ராவும் முக்கியமான குற்றவாளி ஆவார். அவர் மீது ஏற்கெனவே கொலை குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவசாயிகளை படுகொலை செய்த குற்றத்திற்கு காரணமானவரும் அவரே. அவரை உடனடியாக ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; கைது செய்ய வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கமும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் இடைவிடாத போராட்டங்களைத் தொடர்ந்தன. அவரை பதவி நீக்கம் செய்வோம் என்று ஒன்றிய அரசு ஒப்புக்கொள்ளவும் செய்தது. ஆனால் அவரை பதவி நீக்கம் செய்யாதது மட்டுமல்ல, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூல மாக ஆசிஷ் மிஸ்ராவுக்கு பிணையும் வாங்கியிருக் கிறார்கள் பாஜகவினர். இந்த இரண்டும் அநீதி யானவை. ஆசிஷ் மிஸ்ரா வெளியில் நடமாடக் கூடாது. பிணை ரத்து செய்யப்பட வேண்டும். அஜய் மிஸ்ராவும் கைது செய்யப்பட வேண்டும்.