headlines

img

நரபலி கொடுமையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்!

நரபலி கொடுக்கப்படுவதிலிருந்து தப்பிக்க தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உரிய பாது காப்பு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த நூற்றாண்டிலும் நரபலியா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி தெரி வித்துள்ளனர்.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் மூட நம்பிக்கையும், மனிதத் தன்மையற்ற மவுடீகங்களும் எந்தளவுக்கு மண்டிக்கிடக்கிறது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான ஷாலினி ஷர்மா என்ற இளம்பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வில் தாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவப்பிரி வான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா மாந்திரீகம் போன்ற மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கொண்டு தன்னை நரபலி கொடுக்க முயல்வதாகவும், இதிலி ருந்து தப்பிக்க நண்பர் ஒருவரின் உதவியுடன் தமிழ் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், தமக்கும் தனக்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

அவர் கூறியுள்ள மேலும் ஒரு தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. தன்னுடைய தாய் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர் என்ப தால் புகாரை ஏற்க ம.பி. போலீசார் மறுப்பதாக வும், இப்போது கூட தன்னை கடத்திச் செல்ல ஏபி விபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய வளர்ப்புத் தாய் ஏற்கெனவே தனது சகோதரன் உட்பட இருவரை நரபலி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தென்மாநிலங்களில் இத்தகைய கொடு மைகள் பெருமளவு மறைந்து விட்ட நிலையில், ம.பி.யில் இது தொடர்வது வேதனையளிப்பதாக கூறி அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இது தனிப்பட்ட ஒருவரின் மூட நம்பிக்கை என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெண்கள் குறித்த மிகவும் பிற்போக்கான பார்வையே இத்தகைய கொடுமைகளுக்கு காரணம். 

அண்மையில் சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி., சந்திரபிரகாஷ் ஜோசி என்பவர் புகழ்ந்து பேசியதும் அதற்கு எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது. தேவதாசி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூட ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது பேசத் தலைப்பட்டுள் ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுகிய பழமை வாத கருத்தியலை நடைமுறைப்படுத்த முயல்வதன் வெளிப்பாடே நரபலி போன்ற கொடுமையாகும். இந்த மனிதகுல விரோத கருத்தியலையும் நடை முறையையும் முற்றாக கருவறுக்க வேண்டியது அவசியம்.