headlines

img

ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நடுத்தர வர்க்கம்

கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு குடும்பம் கூட நிம்மதியாக இருக்க முடியவில் லை என்பதே உண்மை. ஒவ்வொரு  குடும்பத்தி லும் சொந்த வீடு என்பதே ஒரு பெருங்கன வாகும். அந்த கனவு நனவாக ஒவ்வொரு குடும்பத்தி லும் கணவனும் மனைவியும் செய்யும் தியாகங்கள் பற்பல. நடுத்தர வர்க்கம் என்றால் சின்னஞ்சிறிய மகிழ்ச்சியை கூட தள்ளிப்போட்டு தங்களது எதிர்காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக உழைக் கிறார்கள். அதில் கிடைக்கும் தொகையை சேமித்து அதை தங்களது பங்காக வைத்து வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குகிறார்கள். அதிகரித்து வரும் வீட்டுக்கடனுக்கான வட்டி  விகிதம் நடுத்தர மக்களை  உலுக்கி எடுத்து வருகிறது. இதனால் வருமானத்தில் ஒரு குறிப் பிட்ட பகுதியைக்கூட சேமித்து  வைக்க முடி யாமல் பல குடும்பங்கள் அவதிப்படுகின்றன.

நாட்டில் வீட்டுக்கடன் அளவு, எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு டிசம்பர்  மாதம்  வரையிலான காலகட்டத்தில் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40 விழுக்காடாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக நிகர நிதிச் சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5விழுக் காடாக குறைந்துவிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் 2022-23 நிதியாண்டில் குடும்பங்களின் நிகர நிதி  சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1விழுக் காடாகக் குறைந்து விட்டதாக தெரிவித்தது. இது 47 ஆண்டுகளில் இல்லாத பெரும் வீழ்ச்சியாகும். 

வீடுகள், வாகனங்கள் போன்ற சொத்துக் களை வாங்குவதற்கு குடும்பங்கள் கடன் வாங்குகின்றன. ஆனால் அந்த கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்திக் கொண்டே இருந்த காரணத்தால் பெரும் பாலான நடுத்தரக் குடும்பங்கள் கடந்த காலத்தை விட குறைவான அளவிலேயே சேமிக்க முடிந்துள்ளது. எதிர்காலத்தில் நம்மால்  அதிகளவில் சேமிக்க முடியும்; அதில் ஒரு பகுதியை இந்த சொத்துக்களுக்கான கட னுக்கு கட்டமுடியும் என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டது மோடி அரசு. 

இந்தாண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட 2022-23ஆம் நிதியாண்டுக்கான தேசிய வரு மானத்தின் முதல் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக் காடாக சற்று உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள போதிலும் அது கடந்த 47 ஆண்டுகளில் மிகக் குறைவாகவும், சராசரி 7.6விழுக்காடு  ஜிடிபி என்ற அளவைவிட பலவீனமாக உள்ளதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.   

 இதுதான் மோடி அரசின் சாதனை. மேலும் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் கடன்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. இதனால் நம்பிக்கை யற்ற எதிர்காலத்துடன் ஒவ்வொரு நாளையும் கடக்கவேண்டிய ஆபத்தான நிலைக்கு ஏராளமான குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.