தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையி லான அமர்வு வியாழனன்று வழங்கியுள்ள தீர்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை உறுதிசெய்துள்ள தோடு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொட ரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதை உறுதி செய்த தோடு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் இதை விரிவுபடுத்தியது.
இதை எதிர்த்து தனியார் பள்ளி மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப் பட்டன. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த உள்ஒதுக்கீடு அவசியம் என தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால் ஒன்றிய அரசு வழக்கம்போல இதிலும் குறுக்குசால் ஓட்டியது. ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே நாடு ஒரே தேர்வு என்ற ஒன்றிய அரசின் கோட்பாட்டிற்கு இது எதிரானது என்றும் நீட் தேர்வை இந்த உள்ஒதுக்கீடு நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் வாதிட்டது. ஆனால் இந்த வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்காதது ஆறுதல் அளிக்கி றது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் நன்றி சொல்வதாகவும் கூறியுள்ளது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஒட்டுமொத்த தமிழக மாணவர்கள் எண்ணிக் கையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்க ளின் விகிதத்தை கணக்கிட்டு அதற்கேற்ப உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைந்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.
இந்த விசயத்திலும் நீட் தேர்வை புகுத்தி ஒன்றிய அரசு குழப்பம் விளைவிக்க முயலும் நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை யின் நியாயம் மேலும் வலுப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை இதுகுறித்து தீர்மானம் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பிய போதும் அவர் அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் இழுத்த டித்து வருகிறார். ஆளுநர் இந்த தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்புவதும் அவர்கள் நியாயமாக முடிவெடுக்க வேண்டுமென வலி யுறுத்துவதும் அவசியமாகிறது.