நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிரு க்கும் ‘’தேர்தல் ஆணையர் நியமன மசோதா’’ இதுவரை தேர்தல் முறையில் இருந்து வந்த ஜனநாயகத்தை அடியோடு வேரறுக்கும்.
ஏற்கனவே நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமை யிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ‘’பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பிரதமர் மற்றும் அவரால் நியமிக்கப்படும் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் பரிந்துரைப்பவர்கள் தேர்தல் ஆணை யர்களாக நியமிக்கலாம் எனத் திருத்தம் செய்தி ருக்கிறது.
இதில் எப்படி மாற்றுக் கருத்திற்கு இடமி ருக்கும்? 3 பேர் குழுவில் இருவர் ஆளும் கட்சி யைச் சேர்ந்தவர்கள் என்றால் அதுவே பெரும் பான்மை. அதை விட மிக ஆபத்தானது. தேர்தல் ஆணையர்கள் பாரபட்சமாகவோ அல்லது மோசடி, தவறு ஏதும் செய்தாலோ அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது. மாறாக நாடாளுமன்றத்தின் மூலம் உச்சநீதி மன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும்.இது நீதித்துறைக்கு மாற்று ஏற்பாடு ஆகாதா?
இந்த மசோதா கொண்டுவந்ததன் பின்ன ணியைப் பார்த்தாலே இதன் சூட்சுமத்தை புரிந்து கொள்ள முடியும். 2014இல் மோடி பிரதமரான பின்பு வாக்கு இயந்திர பாதுகாப்பு விதிமுறை களை மீறி சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு உதவியது அம்பலமானது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்கிற்கும் எண்ணப்பட்ட வாக்கிற்கும் 373 தொகுதிகளில் வேறுபாடு இருந்தது. இதுவரை தீர்க்கப்பட வில்லை. சிக்கிம் மாநிலத்தில் ஊழல் வழக்கில் 1 வருடம் சிறைத் தண்டனை பெற்ற பிரேம்சிங் தாமங் பாஜகவுடன் கைகோர்த்தார். உடனே 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது என்ற தேர்தல் விதியை 1 வருடம் 1 மாதம் என மாற்றி மோடிக்கு ஆள்பிடித்து கொடுத்து, ஆட்சியையும் பகிர்ந்து கொடுத்தது.
தேர்தல் பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வரும், மக்களிடையே மதரீதியான பிளவை ஏற் படுத்திய மோடி, அமித்ஷாவைக் கண்டித்த தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவசா ஓரங்கட்டப்பட்டு, தலைமைத் தேர்தல் ஆணை யராக வரவிடாமல் தூக்கியடிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையர் தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது என்றது. ஆனால் மோடி அரசோ தேர்தல் ஆணை யத்தையே சங்பரிவாரின் தலைமையகமாக மாற்றத்துடிக்கிறது.