headlines

img

அரசியல் சட்டத்தின் சாரத்தையே அவமதிப்பதா?

இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவை யில்லை என்று உளறியுள்ளதன் மூலம் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரச மைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்துள் ளார். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவி யேற்றுள்ள அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர் ஆகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்ட மளிப்பு விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, மதச் சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்து. மதச் சார்பின்மை என்பது ஒரு இடைச்செருகல். இந்தி யாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை என்று வம்படியாக வாயடித்துள்ளார்.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

ஆர்.என்.ரவி ஒரு ஆர்எஸ்எஸ் வளர்ப்பு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அந்த அமைப்பு பங்கேற்றதேயில்லை. இன்னும் சொல்லப் போனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதர வாக இருந்த அமைப்பு தான் அது. 

ஆனால் மதச்சார்பின்மை, ஜனநாயகம், மொழிவழி மாநிலங்கள் என்பதெல்லாம் விடு தலைப் போராட்டத்தில் விளைந்த விழுமியங்கள். விடுதலை பெற்ற இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மொழிகளுக்கிடையே சமத்து வமும் நிலைக்க வேண்டுமானால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக திகழ வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் மதச்சார்பின்மை என்கிற சொற்றொடர் அவசர நிலைக் காலத்தின் போது சேர்க்கப்பட்ட போதும் மொத்த அரசமைப்புச் சட்டமும், மதச் சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் என்ற அடித்தளத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற் காக நடந்த அரசியல் நிர்ணய சபையில் இது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற் றுள்ளன. ஆனால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள், மநு அதர்மம் மற்றும் வர்ணாசிரம அநீதியின் அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண் டும் என அந்தக் காலத்தில் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அரசியல் சட்டத்தை ஏற்க முடியாது என சண்டித்தனம் செய்தனர். அந்தக்குரலையே இப்பொழுது ஆளுநர் ரவி அபஸ்வரம் போல எதிரொலித்து வருகிறார்.

அரசியல் சாசனத்தில் நம்பிக்கையற்றவர் ஆளுநர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சாடியுள் ளார். அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஆளுந ரின் அபத்தக் கருத்தை கடுமையாக எதிர்த்துள் ளனர். ஆளுநரை இப்படியே உளறவிட்டால் ஜன நாயகம் என்பது கூட அந்நியக் கருத்து என்றும்  முடியாட்சி காலத்திற்கு இந்தியா திரும்ப வேண் டும் என்றும் கூட கூறத் துவங்கிவிடுவார். நவீன இந்தியாவை நேசிக்கிற அனைவரும் ஆளுநரின் கருத்தை எதிர்த்தாக வேண்டும்.