ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து ஏழாண்டுகள் கடந்த பின்னும் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, இருக்கும் வேலைவாய்ப்பும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை தான் அதி கரித்துக் கொண்டிருக்கிறது. இதை ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை மற்றும் கடன் தொல்லையால் 25 ஆயிரம் பேரும், கடன் சுமையால் மட்டும் 16 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.
அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ள எண்ணிக்கைக்கூட தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம்தான். உண்மையில் கொரோனா கொடுந்துயர் காலத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
வேலையின்மையால் நிகழும் தற்கொலை களை தடுக்க இப்போதுகூட புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குவோம் என்று ஒன்றிய அமைச்ச ரால் கூறமுடியவில்லை. மாறாக, வேலையில்லாத வர்களுக்கு மனநல சிகிச்சை அளிப்போம் என்று தான் கூறுகிறார். வேலையின்மை என்பது மனப் பிரச்சனை மட்டுமல்ல, வாழ்க்கைப் பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனை இதற்கு மோடி அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தொழில் மற்றும் சேவைத்துறைகளில் நெருக்கடி ஏற்பட்டது. கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்த சிறு, குறு நிறுவனங்கள், லட்சக்க ணக்கில் மூடப்பட்டன. 2019 இறுதியில் கொரோ னா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிலைமை மேலும் விபரீதமானது. மோடி அரசு அளித்த நிவாரணங்கள் அனைத்தும் சிறு, குறு நிறுவனங்களுக்கோ, ஏழை, எளிய மக்களுக்கோ செல்லவில்லை. மாறாக ஏற்கெனவே நாட்டை கொள்ளையடித்து வரும் கார்ப்பரேட் முதலாளிக ளின் கரங்களுக்கே சென்றது.
கொரோனா காலத்தில் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களை நூறு நாள் வேலைத்திட்டம் ஓரளவு பட்டினிச்சாவிலிருந்து தடுத்தது. ஆனால் இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொ டர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டி லும் கூட 25 சதவீதம் அளவிற்கு நிதி வெட்டப்பட்டுள் ளது. இதுதான் வேலை வாய்ப்பைப் பெருக்கும் லட்சணமா?
வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியால் எந்த லாபமும் இல்லை. ஆனால் மோடி அரசு அறிவிக்கும் பல திட்டங்கள் வேலை வாய்ப்பை சுருக்கும் திட்டங்களாகவே அமைந்துள்ளன. இதை திசை திருப்பவே மதவெறியை தூண்டி விடுகின்றனர் ஒன்றிய ஆட்சியாளர்கள். விவசா யம், சிறு, குறு நிறுவனங்கள், நெசவு மற்றும் சேவைத் துறைகளை பாதுகாக்காமல் வேலை வாய்ப்பை உரு வாக்க முடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.