headlines

img

யார் வன்முறையாளர்கள்?

வரலாறு நெடுகிலும் வலதுசாரிகள் வன்முறை யாளர்களாகவே இருந்துள்ளதைக் காட்டுவ தற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இனம், மொழி, மதம், சாதி போன்றவற்றின் பெயரால் யுத்தங்களையும், கொடிய வன்முறைகளையும் நிகழ்த்தியுள்ளனர். 

மன்னராட்சிக் காலமாயினும் ஜனநாயக ஆட்சியாயினும் இதில் மாற்றங்கள் இல்லை. அதனால்தான் இடதுசாரிகளால் அமைதியும் நல்லிணக்கமும் நல வாழ்வும் முன்வைக்கப்பட் டன. அதனால் அவர்கள் மீது அவதூறுகளும் வசைமாரியும் பொழியப்பட்டன. வன்முறைத் தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன. ஹிட்லர், முசோலினி என தனித்தனியே பெயர்களை கொண்டிருந்தாலும் நாஜிசம், பாசிசம் என்றி ருந்தாலும் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள், இடது சாரிகள் மீது கொலைபாதகங்கள் நடத்தினர். 

இந்தியாவில் இன, மத, மொழியுடன் சாதி வெறியும் கொண்டு ஜனநாயகத்தை நசுக்கவும் நாடாளுமன்ற தேர்தல் முறையை ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாற்றவும் திட்டமிட்ட பாஜக  ஆட்சியாளர்களுக்கு மக்களவைத் தேர்தலின் மூலம் மக்கள் பாடம் புகட்டினர்; கடிவாளமிட்டனர். ஆயினும் தோற்றாலும் நாங்களே வென்றோம் என்று முட்டுக்கால்கள் மூலம் நின்று கொண்டு மார்தட்டுகின்றனர்.

உலகில் சில நாடுகளில் வலதுசாரிகள் தேர்தல்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரான்சில் இடதுசாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முதலிடத்துக்கு வந்தனர். ஆனாலும் அவர்களி டம் ஆட்சியை ஒப்படைக்க அந்நாட்டு ஜனாதிப திக்கு மனமில்லை. இங்குள்ள இந்துத்துவா ஆட்சி யாளர்களும் பாஜகவினரும் இடதுசாரிகளின் அரசி யல் செல்வாக்கு கண்டு எரிச்சலடைகின்றனர்.  சமீப காலமாக மிகத் தீவிரமாக வன்மம் கக்கிடும் நடிகை கங்கனா ரணாவத், அமெரிக்காவில் டிரம்ப் மீது நடந்த தாக்குதலுக்கு இடதுசாரிகள் தான் காரணம் எனப் பிதற்றியுள்ளார். டிரம்ப் தனது நண்பர் என்கிறார் நரேந்திர மோடி.  உண்மைதான். கடந்த முறை தோல்வியுற்ற டிரம்ப் அதை ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்க நாடாளுமன்றம் மீது கூட தமது ஆதரவாளர்களை ஏவி  தாக்குதல்  நடத்தினார். இப்படி, இயல்பான கூட்டாளிகளான தால் தான் அதீதமாகப் பேசுகிறார் கங்கனா.

அவர் மட்டுமல்ல, பாஜகவின் செய்தித் தொ டர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத் தில், இந்தியாவில் ஜனநாயகத்தை அழிக்க சர்வ தேச இடதுசாரிகள் தீவிர முயற்சி செய்தனர் என்று  குதர்க்கம் பேசியுள்ளார். மற்றொரு செய்தித் தொ டர்பாளர் ஷெசாத் பூனாவாலா, டிரம்ப்பை கொலை செய்ய முயற்சித்தது போல மோடியை கொல்ல 3 சதித் திட்டங்கள் அரங்கேறியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் இடதுசாரிகளையும் முற்போக்காளர்களையும் அப்பாவி மக்களை யும் கூட பட்டப்பகலில் வெட்டிக் கொல்லும் பயங்க ரத்தில் பாஜக பரிவாரங்கள் ஈடுபட்டு வருவது நாட்டு நடப்பு. அதன் தற்போதைய உதாரணம் திரிபுரா. அதனால் இவர்களின் பசப்பல் வேலை கள் மக்களிடம்  எடுபடாது.