“பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்” - என்று புகார் நகரை வாழ்த்திப் பாடுகிறது சிலப்பதிகாரம்.
பூம்புகார் நகர் குறித்து பாரதிதாசன் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தொலை உணர்வு பிரிவு நடத்திய ஆய்வு முடிவு கள் வியப்பூட்டுகின்றன.
பூம்புகார் எனும் துறைமுக நகரின் வரலாறு 2500 ஆண்டுகள் முந்தையது என்று கருதப்பட்ட நிலையில், 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை யது புகாரின் வரலாறு என இந்த ஆய்வுத் திட்டத் தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.எம்.ராமசாமி கூறியுள்ளார்.
பூம்புகார் குறித்த பாடல்கள் சிலப்பதிகாரத்தில் மட்டுமின்றி பட்டினப்பாலை உள்ளிட்ட பல்வேறு சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. பூம்புகார் நகரம் ஆழிப்பேரலையால் அழிந்தது குறித்த குறிப்பு மணிமேகலையில் இடம் பெற்றுள்ளது.
பூம்புகார் துறைமுகத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இலங்கை, பர்மா, சீனா, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் வந்து வணிகம் செய்து வந்ததை இலக்கியக் குறிப்புகள் மட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாய்வு குறிப்புகளும் மெய்ப்பிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய துறை முகமாக பூம்புகார் விளங்கி வந்ததோடு, முசிறி, தொண்டி, பெரிய பட்டினம், அழகன்குளம், கொற்கை, மரக்காணம், தேவிபட்டினம், நாகை போன்ற இடங்களிலும் துறைமுகங்கள் இருந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் காவிரிபட்டினம், சோழப்பட்டினம் என பல்வேறு பெயர்களில் அழைக் கப்படும் பூம்புகாரில் நாளங்காடி, அல்லங்காடி என இரவு, பகலாக வணிகம் நடந்து வந்திருக்கி றது. ஆனால் இயற்கை சீற்றத்தால் கடல் கொள் ளப்பட்டு நீரில் மூடிக்கிடக்கும் இந்த பரந்து விரிந்த பகுதி குறித்த ஆய்வு முடிவுகள் வியப்பளிக்கின்றன.
இயற்கை பேரழிவுகளால் அழிந்த நிலையில் துறைமுக நகரம் அடுத்தடுத்து மறு கட்டுமானம் ஏழு முறைக்கு மேல் நடந்திருக்கலாம் என்றும் 1020 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்ட உயர்வு காரணமாக மீண்டும் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூம்புகார் உள்ளிட்ட தமிழக துறைமுக நகரங் களை கண்டறிய விரிவான கடல் ஆய்வு செய்யப் பட வேண்டும். நவீன தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்துள்ள நிலையில், இத்தகைய ஆய்வுக் கான வாய்ப்புகள் நிறைந்துள்ளன. ஆனால் ஒன்றிய அரசு இதில் உரிய கவனம் செலுத்துவ தில்லை. இல்லாத ராமர் பாலம் குறித்து பேசும் பழமைவாதிகள் நீரில் மூழ்கியுள்ள புகார் நகர் குறித்த ஆய்வில் அக்கறை கொள்வ தில்லை. இதற்கான அழுத்தத்தை உருவாக்க வேண்டியுள்ளது. புகார் நகரம் கண்டறியப்படு மானால் அறியப்பட்ட உலக வரலாற்றையே திருத்தி எழுத வேண்டியிருக்கும்.