நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக் கையை வெளிப்படுத்துகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் கூறியுள்ளார்.
தென் மண்டல நீதிபதிகளுக்கான இரண்டு நாள் மாநாடு கோவையில் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அவர், நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது நீதித்துறையின் முக்கிய கடமை. இந்த பொறுப்பை நிறைவேற்ற நீதித்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி யுள்ளது வரவேற்கத்தக்கது.
இதே நிகழ்வில் பேசிய தேசிய நீதித்துறை அகாடமி இயக்குநர் அனிருத்தா போஸ், இது போன்ற மாநாடுகள் நிலுவையில் உள்ள வழக்கு களுக்கு விரைந்து தீர்வு காண உதவும் என்று கூறி யுள்ளதும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், வழக்குகள் அதிகமாக இருப்பதால் அதிகப் பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ளதும் ஒன்றோடொன்று இணைத்து பார்க்கத்தக்கவை.
நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க வேண்டுமானால் வழக்குகளை உட னுக்குடன் விசாரித்து நீதி வழங்க வேண்டியது அவசியம். வழக்குகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அதற்கேற்ப நீதிபதி பணி யிடங்கள் உள்ளிட்ட அனைத்து நீதித்துறை பணி யிடங்களையும் உடனுக்குடன் நிரப்பி பணிச்சுமை யை எதிர்கொள்வதற்கேற்ப நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
இந்தாண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் 80,439 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 62ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வும், இதில் 3 வழக்குகள் 1952லிருந்தே நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் என மொத்தம் 58.59 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது வெறும் புள்ளி விபரம் அல்ல. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளால் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. வழக்கை விசாரித்து தண் டனை அளிக்கப்படாமல் சிறையில் விசாரணை கைதியாக அடைத்து வைத்திருப்பது என்பதும் ஒரு வகையில் அநீதியே ஆகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிட மாக நீதித்துறையே உள்ளது. மக்களுக்கு சட்டப் படியான நீதி, சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். நரேந்திர மோடி அரசு தன்னுடைய கெடு நோக்கத்திற்கேற்ப சட்டங்க ளை மாற்றுகிறது. அரசியல் சட்டத்தை பாது காக்கும் வகையிலும், நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையை பாதுகாக்கும் வகையிலும் பாதிக் கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையிலும் உரிய சீர்திருத்தங்கள் செய்யப் படுவது அவசியமாகும்.