குளிக்கச் சென்ற குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். குளத்தில் குளிக்கச் சென்ற சிறு வனை காப்பாற்றச் சென்ற தாயும், மகனும் பலியாகி னர். குளிக்கச் சென்று மூன்று சிறுமிகள் குட்டை யில் மூழ்கி பலியானார்கள். குளத்து நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி உயிரிழந் தார். இத்தகைய செய்திகள் நாளிதழ்களில் அவ்வப் போது வந்து கொண்டு தான் இருக்கின்றன.
மழை, வெள்ளக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகமாகச் செல்லும்போது, அருவியில் குளிக்கும்போது, குளிக்கச் செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் சுழலில் சிக்கி, தவறி விழுந்து, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆற்றிலோ, குளத்திலோ உயிருக்குப் போரா டும் சிறுவர், சிறுமியரை காப்பாற்றும் சிறுமி, சிறு வர்களுக்கு வீரதீரச் செயல் விருது வழங்கப்பட்டு பாராட்டப்படும் செயலை மாவட்ட, மாநில அரசு நிர்வாகம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் உயிரிழப்பு கொடுமை தானே! எனினும் சோக நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இளம் கன்று பயமறியாது என்பார்கள். சிறுவர், சிறுமியர் குளம், குட்டைகளில் குளிக்கும் போது ஆர்வக்கோளாறில் ஆழமான பகுதிகளுக்குச் சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இது தனியாகச் செல்லும் போதும் நடக்கிறது. பெற்றோர் அல்லது பெரியவர்களுடன் செல்லும் போதும் நடக்கிறது.
சில நேரங்களில் சில குளங்களில் வழக்கமான ஆழத்தை விட மிகப் பெரிய பள்ளங்களில் சிறுவர் கள் சிக்கிக் கொள்கிறார்கள். இது குளங்களை குடிமராமத்துச் செய்யும் பொழுது எந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே இடத்தில் ஆழமாகக் குழியாகத் தோண்டுவதால் ஏற்படும் அசம்பாவிதமாகும்.
முன்பு மனித உழைப்பை பயன்படுத்தி கண்மாய், குளங்களை தூர்வாரும் போதும், ஆழப்படுத்தும் போதும் ஒரே சீரான ஆழத்தில் அகலமாக ஒன்றரை அடி, இரண்டடி என்று ஆழமா கும். ஆனால் தற்போது எந்திரங்கள் கொண்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் மராமத்துப் பணி நடக்கும் போது ஒரே இடத்திலேயே தோண்டி மண்ணை அள்ளுவதால் சுரங்கம் போலாகி விடுகிறது. அதனால் மழைக் காலத்தில் குளங்களில் நீர் நிரம்பி யிருக்கும் போது சிறுவர்கள் அதில் மூழ்கி இறக்கும் சோகம் நடந்துவிடுகிறது.
குளிக்கச் செல்லும் சிறுவர்களை காவு வாங்கும் நிகழ்வுகளில் குடிமராமத்துப் பணியின் முறை கேடும் கூட ஒரு காரணமாகி விடுகிறது. என்றாலும் சின்னஞ்சிறுவர்கள் குளிக்கச் செல்லும்போது அவர்களை தனியே அனுப்புவதை பெற்றோர் தவிர்த்திடல் வேண்டும். இல்லையேல் குழந்தைக ளை பறிகொடுத்துவிட்டு வாழ்க்கை முழுவதும் கவலைப்பட நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
குளிக்கச் சென்று தண்ணீரில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த திருச்சி ஸ்ரீரங்கம்பட்டி நர்சிங் மாணவி போதும்பொண்ணு வுக்கு தமிழக அரசு வீரதீரச் செயல் விருதும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்கிட வேண்டும். ஓருயிரைக் காப்பாற்ற தன்னுயிரை ஈந்த அந்த மாணவியின் புகழ் நிலைக்கட்டும்.