headlines

img

அநாகரீகம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்குப் பாது காப்பு என்ற பெயரில் பட்டம் வாங்க வந்த மாண வரிடம்  தமிழகக் காவல்துறை  நடந்து கொண்ட  விதம் கண்டிக்கத்தக்கது.

தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பில் பட்டம் முடித்தவர் அரவிந்தசாமி. இவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவ ராகவும் இருந்து வருகிறார். குடும்பத்தின் முதல் பட்டதாரியும் ஆவார். இவரைப் பட்டமளிப்பு விழாவிற்கு முறைப்படி அழைத்து,  வெள்ளை  அங்கி அணிவித்து இருக்கையும் கொடுத்தி ருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு வந்த  மாநில உளவு பிரிவினர் அரவிந்தசாமியை  எழுந்து நிற்க வைத்து  ஆயிரக்கணக்கான மாண வர்கள் முன்னிலையில்  குற்றவாளி போன்று நடத்திச்  சோதனையிட்டிருக்கின்றனர்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்த உளவு  பிரிவினர் மீண்டும் நிற்கச் செய்து தலைமுடி முதல் உள்ளங்கால் வரை சோதனையிட்டி ருக்கின்றனர். உடன் வந்திருந்த உறவினர்கள் முன்னிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு அரவிந்தசாமி  உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் மீண்டும் வந்த கருப்பு சீருடை அணிந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் அர விந்தசாமியை அரங்கிலிருந்து வெறியேற்றி மின்சாதனங்கள் இயக்கும் தனி அறையில் அடைத்திருக்கின்றனர்.

அங்கு அவரது ஆடைகள் முழுவதையும் கலைந்து சோதனையிட்டிருக்கின்றனர். அப் போது ஏன் கருப்பு நிற உள்ளாடை எனக் கேள்வி யெழுப்பியதோடு, அந்த உள்ளாடையையும்  சோதனையிட்டிருக்கின்றனர். மனரீதியாக கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். பட்டமளிப்பு விழா நிறைவு பெற்று ஆளுநர் செல்லும்வரை அங்கேயே அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார். அதன் பின்னும் வெளியில் விட வில்லை. மீண்டும் உள்ளூர் காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி ஊரைச் சுற்றியிருக்கின்றனர்.

விழாவில் கல்வியமைச்சர் பங்கேற்றிருந்த போதிலும், ஆளுநர் ரவியைக் குளிர்விக்க ராஜா வை மிஞ்சிய ராஜவிசுவாசியாக தமிழக காவல் துறையினர் நடந்து கொண்டிருப்பது தமிழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. காவல்துறையினரின் மனிதத் தன்மையற்ற , அநாகரீகமான நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இது அரவிந்தசாமியை மிரட்டும் செயல் அல்ல. ஆளுநரின் தமிழக நலனுக்கு எதிராக செயல்பாட்டை கண்டிக்க முன்வரும் அனைத்து மாணவர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயல் ஆகும். சிறப்பு பாதுகாப்பு படையின ரிடம் அரவிந்த சாமியை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன ? ஒன்றிய அரசின் நீட் திணிப்பு, இந்தி திணிப்பு, ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான  ஆளுநரின் நிலைபாட்டை எஸ்எப்ஐ எதிர்த்ததை  தமிழக காவல்துறை மிகப் பெரிய குற்றமாக பார்க்கிறதா? தானடித்த மூப்பாக காவல்துறை செயல்படுமானால், அதுவே தமிழக அரசிற்கெதி ரான  மக்களின் அதிருப்திக்கு தூபமிடுவதாக அமைந்து விடும். பல்பிடுங்கும் பல்வீர்சிங் போன்று வரம்பு மீறியிருக்கும் தஞ்சை காவல் துறையினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.