தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு மாநில அரசை முடக்குவதிலேயே குறியாக உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் ``மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாம் அதை நிறுத்தி வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்ட தாக பொருள்” என்று வினோத விளக்கமளித்துள் ளார். பொதுவான பிரச்சனைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிவந்த அவர், தற்போது மாநில சட்டப்பேரவை நடைமுறைகள் தொடர்பாகவும் பேசத் தொடங்கியிருக்கிறார்.
ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர் நிர்வாக ரீதியாகத் தான் எடுக்கும் நிலைபாடு குறித்து பொது வெளியில் அலட்சியமாக கருத்து களைத் தெரிவிப்பது அரசியல் சட்ட வரையறை களை மீறிய செயலாகும். ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட இணைய விளையாட்டுக்களைத் தடை செய்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாவுக்கு முதலில் ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்தார். மீண்டும் மாநில அரசு அனுப்பி னால் அதற்கு அவர் ஒப்புதல் தரவேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்ய வில்லை.
மக்கள் நலன்களைப் பாதுகாக்க இதுபோன்ற சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்த பின்னரும் ஆளுநர் ஏற்றுக் கொள்வதாக இல்லை. வேண்டுமென்றே விளக்கம் கேட்டு காலம் கடத்தினார். மக்கள் நலன் சார்ந்து மாநில அரசு கொண்டு வரும் சட்டங்கள் அனைத் தையும் முடக்கி, மாநில அரசுக்கு மக்களிடம் அவப் பெயரை ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு அவர் செயல்பட்டுக் கொண்டிருப்பது இதன் மூலம் தெரிகிறது.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவர் அவமதிக்கி றார். அவர்களது சிந்தனையில் உருவான சட் டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதன் மூலம் , தனது நிர்வாக கடமைகளை செய்வதிலிருந்து அவர் தவறி விட்டார். மாநில அரசு விளக்கம் கேட்டாலும் ஆளுநர் மாளிகையிலிருந்து முறையான பதில் வருவதில்லை. போகிற போக்கில் ஏதாவது ஒரு விழாவில் தனது முடிவை அறிவிப்பது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
ஆயுள் கைதி பேரறிவாளன் விடுதலை விஷ யத்தில் தேவையில்லாமல் - அரசமைப்புச்சட்ட வரைவை மீறி, தானடித்த மூப்பாகவே நடந்து கொண்ட ஆளுநர் உச்சநீதிமன்றத்தால் குட்டுப் பட்ட பின்னரும் திருந்துவதாக இல்லை. ஒரு நிகழ்ச்சி நிரலுடன் அவர் செயல்பட்டுக் கொண்டி ருப்பதால் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் அவரது கண்களுக்குத் தெரியவில்லை. மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப் பிடிக்கும் ஆளுநர் ரவி உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது அவரை ஆளுநர் பதவியிலிருந்து ஒன்றிய அரசு நீக்கவேண்டும்.