அண்மையில் சிவகங்கை மாவட்டம் வேங்கைப்பட்டி கிராம நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை ஒன்றின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்திருக்கிறது. இது நடந்தது பள்ளி யின் காலாண்டு விடுமுறைக் காலம் என்பதால் ஆசிரியர், மாணவர்களுக்கு பாதிப்பில்லாமல் போய்விட்டது. இதுவே பள்ளி விடுமுறைக்குப் பின் வகுப்பு நடைபெறும் நேரத்தில் நடந்தி ருந்தால்...
இந்த தகவல் தெரியவந்த நாளிலேயே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கும் முன்னரே இடியும் நிலை யில் உள்ள பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செய்தி யாளர்களிடம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
அத்துடன் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் பருவமழை தொடங்கயிருப்பதால் பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைக் கட்ட டங்கள் ஆகியவற்றை தாமதமில்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கூறியுள்ளதும் நல்லதே.
மழை வரும் போது மட்டும் அல்லாமல் முன்கூட்டியே இத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதாவது முழு ஆண்டு விடுமுறைக் காலத்திலேயே இத்த கைய பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தற்போது இடிக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் 3030 இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர கத்தின் இணை இயக்குநர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் கடந்த செப்டம் பர் மாதம் 23ஆம் தேதியன்று தெரிவித்துள்ள தகவல் குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2022-23ஆம் ஆண்டுக்கு பள்ளிக் கட்டடங்களின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டும் துவங்குவதற்கு முன்பாகவே சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை முழு ஆண்டு விடுமுறைக் காலத்தி லேயே செய்து முடிப்பதே பயனுடையதாகும். தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவது போல அரசுப் பள்ளிகளின் கட்டடங்கள் மற்றும் இதர அடிப்படை வசதி களான குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து சீரமைப்பது கல்விப்பணி இடையூரின்றி நடப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
என்றாலும் கூட இப்போது காலதாமதமின்றி இந்தப் பணியை நிறைவேற்றுவது அவசியம். இடிக்கப்படும் கட்டடங்களில் நடைபெறும் வகுப்புகளை நடத்துவதற்கான இட ஏற்பாடுகள் பற்றி கவனத்தில் கொள்வதும் அவசியம். வாசிப்பு இயக்கம், எண்ணும் எழுத்தும் போல அர சுப்பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளும் சிறப்பானதாக அமைந்திடல் வேண்டும்.