headlines

img

காவல்துறையின் ஈரலுக்கு சிகிச்சை தேவை

காவல்துறை மானியக் கோரிக்கையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறி விப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட் டுள்ளதோடு காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்ப்பது இன்றியமை யாத குறிக்கோளாக முன்னிறுத்தப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல் துறையின் அத்துமீறல்கள் அதிகரித்தன. தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூட்டை முதல்வர் மற்றும் அமைச்சர் களே நியாயப்படுத்தினர். சாத்தான்குளம் உள்ளிட்ட லாக்கப் படுகொலைகளும் ஆட்சியா ளர்களால் நியாயப்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் காவல்துறையின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் இல்லை என்ற விமர்சனம் எழுகிறது. குறிப் பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அட்டூழியங்களை தடுப்பதில் காவல்துறை முனைப்புக் காட்ட வேண்டும். மேலும் ஜனநாய கப்பூர்வமான போராட்டங்கள், இயக்கங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும். 

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்று முதல்வர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேநேரத்தில் இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் ஆங்காங்கே கலவரங்களை ஏற்படுத்த முயல்வது குறித்து காவல்துறை விழிப் போடு இருக்க முதல்வர் அறிவுறுத்த வேண்டும். இந்த ஆட்சியில் மத மோதல்கள் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் மதக் கலவரங்க ளை ஏற்படுத்தி அதன்மூலம் குளிர்காய பாஜக பரிவாரம் மேற்கொள்ளும் முயற்சிகள் முற்றாக தடுக்கப்பட வேண்டும்.

லாக்கப் படுகொலைகளே இல்லாத மாநில மாக தமிழகம் மாற வேண்டும். தவறிழைக்கும் காவல்துறையினர் மீது துரித நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்செயல்கள் தமிழகத்தில் அதிர்ச்சிய ளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக ஆய்வு கள் கூறுகின்றன. இந்நிலையில் காவல்துறை நட வடிக்கைமட்டுமின்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கூறியுள்ளது சரியானது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் அதைத் தடுக்க சிறப்பு கவனம் தேவை. பல்வேறு குற்றங்களுக்கு காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட அரசு முன் வரவேண்டும். 

காவலர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக் கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பணிப் பளு கார ணமாக அவர்கள் சிரமப்படுவதோடு குற்றங்களை தடுப்பதிலும் இடர்பாடு ஏற்படுகிறது. காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணி யிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும். காவல் துறை நவீனமயமாவது நல்லது. அதே நேரத்தில் மனித உரிமையை மதிக்கிற ஜனநாயகமயமாவதும் அவசியம்.