தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியில் உயர்கல்வியில் எட்டப்படும் வளர்ச்சியும் இணைந்தே இருக்கிறது. ஆனால் சமீப காலமாகத் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் செயல்படும் விதம் உயர்கல்வியின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியி ருக்கிறது.
அண்ணாபல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தில் 476 பொறியியல் கல்லூரி களில் 225 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அடிப்படையான உள்கட்டமைப்பு இல்லை. இந்த கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்களும் இல்லை என்பதும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஆவணங்களில் இருக்கும் பேராசிரி யர்கள் வேறாகவும், கல்லூரியில் இருப்பவர்கள் வேறாகவும் இருக்கின்றனர். இதில் 23 கல்லூரி களில், கல்லூரி முதல்வருக்கான எந்தத் தகுதியும் இல்லாதவர்களே கல்லூரி முதல்வர்களாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
அப்படியென்றால், இங்கே பல லட்சக்கணக் கான ரூபாய் கட்டணம் செலுத்திப் பயிலும் மாண வர்களின் கல்வித் தரம் எப்படி இருக்கும்? தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணங்கள் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை, கல்வி கற்பிப்பதில் ஒரு போதும் காட்டுவதில்லை. அதே போல் கல்லூரிகளில் பணியாற்றும் பேரா சிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) வழிகாட்டுதலின் படி ஊதியமும் வழங்குவ தில்லை. மிகக் குறைந்த ஊதியமே வழங்கி மோசடி செய்கின்றன. இது போன்ற மோசடி களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அர சிடம் என்ன ஏற்பாடு இருக்கிறது?
கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்த முள்ள 2 லட்சம் பொறியியல் படிப்பிற்கான இடங்களில் 72 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. முகவர்களை மூலம் வெளி மாநிலங்களிலிருந்து மாணவர்களை அழைத்து வந்த போதும் இதுதான் நிலை. உயர் கல்வியில் தனியார் ஆதிக்கம் பெற்றால், அவர்களுக்கு லாபமே முதன்மையாக இருக்கும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இயங்கும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 61.84 லட்சம். இதில் 10.6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2014இல் பிரதமராக மோடி பதவியேற்ற போது, கல்வியில் தனியார் நிறுவனங்களின் பங்கு 17 விழுக்காடாக இருந்தது. கடந்த 8 ஆண்டுகளில் இது 49 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது.
இன்று உலகில் கல்வியைக் கட்டணமின்றி வழங்கிய நாடுகளே கல்வி தரவரிசைப் பட்டிய லில் முதல் வரிசையில் இருக்கின்றன. ஆனால் இந்தியா 132 ஆவது இடத்தில்தான் இருக்கிறது. காரணம் கல்வியில் தனியார் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்கக் கல்வித் தரத்திலும் அந்தளவிற்குப் பின்தங்கியே வருகிறோம் என்பதுதான் எதார்த்தம். ஆகவே தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடிவாளத்தை இறுக்கி முறைப்படுத்த வேண்டும். படிப்படியாக அரசே கல்வியை முழுமையாகக் கைக்கொள்ள வேண்டும்.