headlines

img

கருமுட்டை வணிகம்!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம்  அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. முதலாளித் துவம் வறுமையைக்கூட வணிகமாக்கி லாபம் ஈட்டும் கொடூரத்தை அரங்கேற்றி வருகிறது.

இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு கருமுட்டை தானம் அறிமுகமானது. இனப்பெருக்கத்துக்கான தொழில்நுட்ப உதவி ( ஒழுங்கு படுத்தும் ) சட்ட  விதிகள் உள்ளன. அதன்படி  தானம் செய்பவர்கள்  25 முதல் 30 வயதுக்குள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். திருமணமாகி  3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்கள் மட்டுமே கரு முட்டை தானம் அளிக்கலாம். ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டை தானம் அளிக்கலாம். அப்போதும் கூட அந்த பெண்ணிடமிருந்து 7 கருமுட்டைகளுக்கு மேல் தானமாக எடுக்கக் கூடாது என விதிகள் கூறு கின்றன. இந்த விதிமுறைகளை மீறி மோசடிகளில் ஈடுபட்டால் ரூ. 5 முதல் 25 லட்சம் வரை அபராத மும், 5 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்ட னையும் அளிக்கலாம் எனவும் சட்டம் கூறுகிறது.

ஆனால்,  2014 முதல் தமிழகத்தில்  கருமுட்டை தானம் என்பதைக் கடந்து  வணிகமாகவே மாறியி ருக்கிறது. கடந்தாண்டு கூட நாமக்கல் மாவட் டத்தில் சகுந்தலா என்ற பெண்ணிடம் 18 முறை கருமுட்டையை எடுத்திருந்த நிலையில், அடுத்ததாக அவரது உடலில் மிஞ்சியிருந்த சிறு நீரகத்தையும் எடுத்துவிற்ற அவலமும் வெளிச்சத் திற்கு வந்தது. ஆனாலும் இன்னும் சட்டவிரோ தமாக நடக்கும் கருமுட்டை வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 

இதற்கு காரணம்  அந்த குடும்பத்தின் பொரு ளாதார நிர்ப்பந்தம் மட்டுமல்ல, அதனைப் பயன் படுத்தும் தனியார் மருத்துவமனைகளின் லாப வெறியும்தான். இதுமட்டுமல்ல சட்டத்திற்குப் புறம்பாக பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் கருக் கலைப்பு கும்பலும் தமிழகத்தில் செயல் பாட்டில் இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருந்தாலும் குற்றங்கள் தொடர் கின்றன.  

இந்த வணிகம் மேற்கு மாவட்டங்களில் மட்டு மல்ல, தமிழகம் முழுவதும்  பரவலாகியிருப்பதுதான் உண்மை. அதன் பின்னணியில் தனியார் மருத்துவ மனைகளின் வலைப்பின்னலும் இருக்கிறது. கருத்தரிப்பு மையங்கள் என்றாலே தனியார்தான் என்ற நிலை இருக்கிறது. அரசே  அதிகமான கருத் தரிப்பு மையங்களை உருவாக்கிட வேண்டும். அதன் மூலமே விதிமீறல்களைக் குறைத்திட முடியும். கூடுதல் கருமுட்டைக்காகப் பயன்படுத் தப்படும் செயற்கையான மருந்துகள் கடுமையான பின்விளைவுகளை உருவாக்கக் கூடியவை. அதனைத் தொடர்ந்து செலுத்தும் போது கடு மையான பக்க விளைவுகள் மற்றும் புற்றுநோய் உருவாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இது கொடுப்பவர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் எடுக்கும் மருத்துவ மனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும் கண்டிப்பாகத் தெரியும். கருமுட்டை விற்பனையில் தொடர்புடைய அனைவரும் தண்டனைக்குள் ளாக்கப்பட வேண்டும். பெண்ணுடலை வெறும் பண்டமாக்கி பணம் பார்க்கும் பிற்போக்கிற்கும் லாபவெறிக்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.