headlines

img

நம்பிக்கையை ஏற்படுத்திய அரசு

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 18.01 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் சீர்காழியில் 220.0 மி.மீ மழையும் சென்னையில் 55.96 மி.மீ மழையும் பெய்துள்ளது. கடந்த கால அதிமுக ஆட்சியைப் போல் அல்லாமல் பருவ மழை தொடங்குவதற்கு  முன்னரே முதலமைச்சர் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை தீவிரமாகச் செயல்பட்டதால் சென்னையில் கடந்த மாதம் 31ஆம் தேதி இரவிலும் நவ. 1 ஆம் தேதியும் பெய்த மழை யால் சாலைகளில் பெருமளவு தண்ணீர் தேங்கா மல் பார்த்துக்கொள்ளப்பட்டது.  

தண்ணீர் தேங்கிய வியாசர்பாடி, திருவொற்றி யூர் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களில் அகற்றப் பட்டது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த கால அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழை நீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போதுவரை அந்த பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இதனால் நகரில் பல முக்கிய மான சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.  இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என். நேரு, மேயர் பிரியா, தலைமைச்செயலர் இறையன்பு ஆகியோர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதோடு அடிக்கடி கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு பணிகளை விரைவுபடுத்தி வருவது பாராட்டத்தக்கது.  

 அனைத்து ஏரிகளிலும் கணிசமான அளவு தண்ணீர் இருப்பது கோடைக்காலத்திற்குப் பெரி தும் பயன்படும். செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் விவசாயிகள் சங்கத்தின் தொடர் வலி யுறுத்தல் காரணமாகக் கட்டப்பட்ட தடுப்பணை களால் தண்ணீர் தேங்கி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 13 மாவட்டங்களில் மிகக் கன மழையும் சில  இடங்களில் சூறாவளிக் காற்று  வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்தி ருப்பதால் மாநில அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.  சென்னையில் கடந்தாண்டு பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுஅளித்த ஆலோசனையின்படி பருவமழையால்பாதிக்கப்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிந்து சென்னையிலும் இதர மாவட்டங்களிலும், வெள்ளத் தடுப்பு நடவடிக் கைகள் நிறைவேற்றப்பட்டு வருவது நல்லது.

இவை மட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், பெருமழை யின் போது தவிர்க்க இயலாத பட்சத்தில் தண்ணீர் தேங்கினால் அப்பகுதி மக்களை உடன டியாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைப்ப தற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  இயற்கைப் பேரிடர் காலம் என்பது ஒரு அரசுக்கு சவாலான காலம்! அந்தச் சவாலை மக்கள் ஆதரவோடு சேர்ந்து நாம் அனை வரும் வெல்வோம் என்று முதலமைச்சர் கூறி யிருப்பது  நம்பிக்கை அளிக்கிறது.