உடனே செயல்படுங்கள்!
மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரின் சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் தாக்குதல்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் இந்திய மக்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியது. டெஹ்ரானில் உள்ள நமது மக்கள் - வேலை தேடிச் சென்ற தொழிலாளர்கள், கல்வி கற்க வந்த மாணவர்கள், பயணிகள் - அனைவரும் உயிர் பயத்தில் நடுங்கிக் கொண்டி ருக்கிறார்கள்.
“எவ்வளவு நேரம் ஒரு அறையில் காத்திருக்க முடியும்? எங்களுக்கு என்ன தெரியும் வெளியே எப்போது ஏவுகணை விழும் என்று?” என்று கேட்கும் ஒரு இந்திய மாணவியின் குரலில் உள்ள பயமும் விரக்தியும் நம் இதயத்தைப் பிழிகிறது.
இந்நிலையில் ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் தாமதமானவை. போர் வெடித்து சில நாட்கள் ஆன பிறகுதான் “சொந்த வாகனம் உள்ள இந்தியர்கள் டெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்” என்று அறிவிப்பு வெளி யானது. ஆனால் எல்லோரிடமும் சொந்த வாகனம் இருக்குமா? விமான சேவை நிறுத் தப்பட்ட நிலையில், சாதாரண மக்கள் எப்படி வெளியேற முடியும்?
அவசர காலத்தில் நமது தூதரகம் வெறும் மூன்று தொலைபேசி எண்களை மட்டும் வெளி யிட்டுள்ளது. இது போதுமானதா? அவசர நிலை அறிவிப்புகள் செய்வதிலேயே இவ்வளவு தாமதம் என்றால், உண்மையான மீட்பு நடவ டிக்கைகள் எப்போது ஆரம்பமாகும்?]
இந்த சூழ்நிலைக்கு மோடி அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை காரணம். கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய கிழக்கில் சமநிலை காக்கா மல், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு சார்பு நிலைப் பாட்டை எடுத்துள்ளது இந்த அரசு. இஸ்ரேலு டன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்தை புறக்கணித்துள்ளது.
பாரம்பரியமாக இந்தியா மத்திய கிழக்கில் சமநிலை வைத்து, அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவு பேணி வந்தது. இதனால்தான் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் நமது மக்களை பாது காக்க முடிந்தது. ஆனால் மோடி அரசு இந்த பாரம்பரிய கொள்கையை கைவிட்டுவிட்டது.
நிலைமை மேலும் மோசமாகியுள்ள சூழலில், மோடி அரசு உடனடியாக ஈரானில் உள்ள அனை த்து இந்தியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்க ளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க வேண்டும்.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், அர்மீனியா வழியாக நிலப்பாதையில் மீட்பு நடவ டிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும். இதற்கு அந்த நாடுகளின் அரசுமுழு ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
கடற்படை மூலம் பாரசீக வளைகுடா வழியாக மீட்பு நடவடிக்கையை திட்டமிட வேண்டும்.
மோடி அரசு தனது வெளியுறவுக் கொள் கையை மறுபரிசீலனை செய்து, மக்கள் நலனை முன்னிட்டு செயல்பட வேண்டும்.