headlines

img

இனவெறியும் மதவெறியும் கைகோர்க்கும் கொலைவெறி!

உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். யாரிடம்? மேற்காசியப் பிராந்தியத்தில் - குறிப்பாக காசாவில் - குழந்தைகள், பெண்கள், மருத்து வப் பணியாளர்கள், ஐ.நா. நிவாரண முகாம்களில்  உள்ளவர்கள் உள்ளிட்டோரை ஆயிரக்கணக் கில் கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம்.

அதுமட்டுமா? அமைதி மற்றும் நிலைத் தன்மையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிக ளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் தனது ‘எக்ஸ்’ தளத்தில் மோடி குறிப்பிட் டுள்ளார். அமைதி என்றால் மயான அமைதியா? நிலைத்தன்மை என்றால் பாலஸ்தீனர்கள் அனை வரையும் அழித்தொழித்துவிட்டு அவர்களின் நிலப்பரப்பை முற்றிலும் கபளீகரம் செய்வதா? அத்தகைய ஆக்கிரமிப்பாளருடன் தொலைபேசி யில் மோடி பேசியிருப்பது அமைதியை ஏற்படுத்த அல்ல; இஸ்ரேலின் போர் வெறிக்குத் துணை போவதே ஆகும்.

செப்.27 வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய நேதன்யாகு, ஐ.நா. சபை தற் போது இருண்டவீடாகக் காட்சியளிக்கிறது; இங்கு யூத விரோத மனப்பான்மை கொண்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டார். அத்துடன் இஸ்ரேலில் ‘அமைதி’ திரும்பும் வரை ஓய மாட்டோம் என்று கொக்கரித்தார். அதன் பிறகு தான் ஹிஸ்புல்லா தலைவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட படுகொலைகளை இஸ்ரேல் நிகழ்த்தி யிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் பிரதமர் மோடி நேதன் யாகுவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார், எதி ரிக்கு எதிரி நண்பன் என்பது போல. இது வாஜ்பாய் காலத்தில் துளிர்த்த உறவின் உச்சமாகும். இன வெறியும் மதவெறியும் கைகோர்த்துச் செல்லும் கொலைவெறியாகும்.

இது இந்தியாவின் பாரம்பரிய பாலஸ்தீன ஆதரவு அயல்துறைக் கொள்கைக்கு எதிரானது. ஐ.நா.வின் ‘இரு நாடுகள்’ தீர்வுக்கு விரோதமா னது. பாலஸ்தீனம் -இஸ்ரேல் எனும் பரஸ்பர அங்கீ காரமும் நல்லிணக்கமும் தான் அந்தப் பிராந்தி யத்தில் அமைதியை ஏற்படுத்தும். ஆனால்  மோடி அரசின் ஆயுதம் முதல் ஆட்கள் உதவி செயல்பாடு வரை இந்தியாவின் நற்பெயருக்கு பெரும் களங்கம் விளைவிக்கும்.

கடந்த அக்.7 ஹமாஸின் தாக்குதலை ஹிட்லரின் தாக்குதலுக்கு இணையானது என்று குறிப்பிடும் நேதன்யாகுவின் தற்போதைய தாக்கு தல்கள், சர்வதேச நீதிமன்றத்தின் - ஐ.நா.வின் - முடிவுகளுக்கெல்லாம் எதிராக நடப்பது  ஹிட்ல ருக்கு எந்த வகையில் குறைந்தது? குருச்சேத்திர  யுத்தத்தில் பாண்டவர்களை கௌரவர்கள் வென்றதாக மகாபாரதம் கூறவில்லை. வர லாற்றில் இன்னொரு ஹிட்லராக நேதன்யாகுவும் அவருக்கு துணை நின்றவர்களில் ஒருவராக மோடியும் இடம் பெறுவது தவிர்க்க முடியாத தாகும்.

லெபனானுக்கு அரபு அமீரகம் ஆதரவு

லெபனானுக்கு ஆதரவு  கொடுப்பதாக அரபு அமீர கம் தெரிவித்துள்ளது.  இஸ்ரேல் ராணுவம் லெப னானுக்குள் தரைவழித் தாக்குதலை துவங்கியுள்ள நிலை யில் லெபனானுடன் அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பகிர்ந்துள்ளது. மேலும் இரண்டு நாடுகளிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.