மிக்ஜம் புயல் மற்றும் அதிகனமழை காரண மாக தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பத் துவங்கி யுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங் களில் அதிகனமழை பெய்து வருகிறது. விருது நகர், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
இடைவிடாத கனமழை காரணமாக குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்க ளில் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழி கின்றன. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி மாநகரம் உட்பட பல ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம், தொலைத்தொடர்பு, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந் தூர் உள்ளிட்ட ஊர்கள் வெள்ளத்தால் தனித்தீவு போல மாறியுள்ளன.
பல ஏரிகள், குளங்கள், கண்மாய்களின் கரை கள் உடைந்து சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ரயில் தண்ட வாளங்கள் அரிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நீடிப்பதால் இந்த நான்கு மாவட்டங்க ளிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது அச்சத் தையும், கவலையையும் அதிகரிப்பதாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை அளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது. 1931ஆம் ஆண்டு க்குப் பிறகு பாளையங்கோட்டையில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி யுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து இயற்கை பேரிடர் மீட்புப் படையோடு முப்படைகளின் உத வியும் கோரப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கைப் பேரிடரைச் சமாளிக்க மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அனைத்து வகை யிலும் துணை நிற்பது அவசியமாகும்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைப்பது, அத்தி யாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வகை செய்வது போன்றவை முதன்மைப் பணி யாக உள்ளது. விவசாயம், கால்நடை மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிக ளிலிருந்தும் உதவிக் கரங்கள் நீள வேண்டிய நேரமிது. இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தொலைநோக்குத் திட்டங்கள் அவசியம்.