headlines

img

உலகிற்கு ஒரு நீதி, உமக்கு ஒரு நீதியா?

அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் சமூக அமைப்புகள் குறித்து உலகுக்கு நாம் தெரியப் படுத்த வேண்டும் என்று ஒன்றிய அயல்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார். 

மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவர் இவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் பேசியுள்ளாரே என்று வியப்புடன் படித்துப் பார்த்தால் தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜியில் நடந்த 12ஆவது உலக இந்தி மாநாட்டில்தான் அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது அவர் கூறி யுள்ளதை அவரே மறுப்பது போல முரண்பாடாக அமைந்துள்ளது.

பிஜி தீவில் இந்தி மொழி அறிஞர்கள், எழுத்தா ளர்கள் 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலக இந்தி மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய கலாச்சா ரத்தை இந்தி உள்ளிட்ட மொழிகளில் கற்பித்தல் மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம்தான் பரப்ப முடியும் என்று கூறியுள்ளார். 

இந்தியாவில் இந்தி என்ற ஒற்றை மொழி மட்டுமே பேசப்படவில்லை. தமிழ் உட்பட பல நூறு மொழிகள் பேசப்படுகின்றன. வெளிநாடு ஒன்றில்  இந்திய மொழிகள் மாநாடு என்று நடத்தியி ருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 

ஆனால் இந்து-இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்பாட்டின் வழி  நடக்கும் ஒன்றிய பாஜக அரசு இந்தி மற்றும்  சமஸ்கிருத மொழிகள் மட்டுமே இந்திய மொழி களாக உலக அரங்கில் காட்ட முயற்சிக்கிறது.

உலகின் பன்முகத்தன்மையை புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதுமே உலகிற்கு நாம் அளிக்கும் முழுமையான நீதி என்று அந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியுள்ளார். முதலில் இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீக ரித்து அனைத்து இந்திய மொழிகள் மற்றும் பன்முகப் பண்பாட்டிற்கு நீதி வழங்க மோடி அரசு முன்வரட்டும்.

1903ஆம் ஆண்டுக்கும் 1916ஆம் ஆண்டுக் கும் இடையில் காலனித்துவ ஆட்சியாளர்க ளால் தமிழர்கள் இங்கு கொத்தடிமை கூலித் தொழி லாளர்களாக கொண்டு வரப்பட்டுள்ளனர். அங்கு எப்போதும் ஏராளமான தமிழ் பள்ளிகள் உள்ளன. அந்த தீவு நாட்டில் வாக்களிக்க தமிழி லோ, தெலுங்கிலோ படிப்பறிவு பெற்றிருந்தவ ரையும் வாக்காளர்களாக அந்த நாடு சேர்த்துக் கொண்டுள்ளது. 

அந்த நாட்டில் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் நிலையை “கரும்புத் தோட்டத்திலே அவர் கால்களும், கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே” என்று உயிர் உருக பாரதியார் பாடியுள்ளார். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு இந்தி என்ற ஒற்றை மொழியை மட்டும் இந்திய அடையாள மாக மோடி அரசு உலக அரங்கில் முன்வைக்க முயல்வது நவீன காலனியாதிக்க முறையே ஆகும்.