கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. வைக்கம், மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக் களில் கூட பட்டியலினத்தினர் நடக்கக்கூடாது என்று தடை இருந்தது. அதற்கு எதிராக 1924இல் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் ஒரு பகு தியாக பெரியார் தலைமையேற்று முன்னெடுத்துச் சென்றார். ‘வைக்கம் வீரர்’ என்ற சிறப்புப் பெயரை யும் பெற்றார்.
இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை வடிவங்கள் மற்றும் வன்கொடுமைகள் புதிய பரிமாணங்களை எடுத்துள்ளன. திருமணங்க ளுக்காக இணையத்தில் கூட, பொருத்தம் பார்ப்ப வர்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர்க்கும் வகையிலான சொற்களைச் சேர்க்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. சாதி பொருட்டல்ல என்று பதி விட்டிருந்த ஒருவரின் விபரங்களை ஆர்வமுடன் பார்த்த ஒருவருக்கு, உள்ளே சென்றபின் “எஸ்.சி. எஸ்.டி வேண்டாம்” என்பதைப் பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது.
அதேவேளையில், பழைய கோரமான வடிவங்க ளும் தொடர்கின்றன. அதை தமிழகம் சந்தித்துக் கொண்டுள்ளது. ஆணவக் கொலைகளுக்கான கத்திகளும், அரிவாள்களும் கூர்தீட்டப்பட்டு எப் போதுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின் றன. தேசியக்கொடியை ஏற்றுவதற்கு பட்டியலின ஊராட்சித்தலைவர்கள் இயலாத நிலை, விடுதலை நாளையும், குடியரசு நாளையும் களங்கப்படுத்துகிறது.
இந்நிலையில்தான் வைக்கத்தில் புதுப்பிக்கப் பட்ட பெரியார் நினைவகத்தின் திறப்புவிழா, மிக முக் கியத்துவம் பெறுகிறது. சாதி ரீதியான கொடுமைக ளுக்கு எதிரான போர்க்குரல்களுக்கு முன்மாதிரி யான மாநிலங்களாக கேரளமும், தமிழ்நாடும் இருக்கின்றன. தீண்டாமைக் கொடுமைகள் அதிக முள்ள மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தீண்டாமை என்பது கொ டுமையானது என்று கூடப் பார்க்காத சமூக அவலம் அந்த மாநிலங்களில் நிலவுகிறது. சமூக விடுதலை என்பது பேசுபொருளாகக்கூட அந்த மாநிலங்க ளில் இருக்கிறதா என்பது கேள்வியே!
ஆனால் மறுபுறம், தீண்டாமைக்கு எதிரான போரில், கேரளம் வெகு தொலைவைக் கடந்துள் ளது. இடதுசாரிகளின் தாக்கம் பெரும் மாற்றங்க ளைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் தீண்டாமைக் கொடுமைகளின் கூடாரமாக இருந்த கேரளம், அதிலிருந்து விடுபட்டு அனைத்துப் பகுதி மக்களின் முன்னேற்றம் என்ற இடதுசாரி மாடலின் நிகழ்ச்சி நிரலோடு முன் செல்கிறது. மாநில மக்க ளின் முன்னேற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை யும் உள்ளடக்கிய ஒன்றாகவே வடிவமைக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடும் சமூக நீதியை முன்னெடுத்துச் செல்கிறது. சமூக நீதியில் மட்டுமல்ல, மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான தேசிய பட்டி யலில் முதலிரண்டு இடங்களை இரு மாநிலங்களும் பிடித்து வருகின்றன. இந்த இரு மாநிலங்களின் கூடல், இந்தியச் சமூகம் செல்ல வேண்டிய பாதை யில் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை.